238

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
 

(438)

மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல்.

     எ - ன், மாவென்பது இப்பொருட்கண் வருமென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மாவென்னுமிடைச்சொல் வியங்கோட்கண் அசைச்சொல்லாய்வரும் எ-று.

     வ - று. “ 1மாயக் கடவுட் குயர்கமா வலனே”, “உப்பின்று, புற்கை யுண்கமா
கொற்கை யானே” (தொல். இடை. 25, இள. சே. ந. மேற்.) என வியங்கோட்கண்
அசைச்சொல்லாய் வந்தவாறு.

     (பி - ம்.) 1 காலக் கடவுட்கு

(20)

 

(439)

மியாயிக மோமதி யத்தை யித்தை
வாழிய மாளவீ யாழமுன் னிலையசை.

     எ - ன், மியாமுதலிய இடைச்சொற்களின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மியாவும் இகவும் மோவும் மதியும் அத்தையும் இத்தையும் வாழியவும்
மாளவும் ஈயும் யாழவுமென்னும் இப்பத்திடைச்சொல்லும் முன்னிலைக்கண்
அசைநிலையாய்வரும்எ - று.

     வ - று. “சிலையன் செழுந்தழையன் சென்மியா வென்று, மலையகலான் வாடி
வரும்” (யா. வி.) எ - ம், “தண்டுறை 1யூரயாங் காண்டிக வெனவே” எ - ம், “காமஞ்
செப்பாது கண்டது மொழிமோ” (குறுந். 2) எ - ம், “சென்மதி பெரும” எ - ம்,
“மெல்லியற் குறுமக ளுள்ளிச், செல்வ லத்தை” (புறநா. 196) எ - ம், “வேய்நரல் விடரக
நீயொன்று பாடித்தை” (கலி. 40) எ - ம், “காணியவா வாழிய மலைச்சாரல்” (இ. வி. சூ.
276, உரை) எ - ம், “சிறிது தவிர்ந்தீக மாளநின் 2பரிசில ருய்ம்மார்” (இ. வி. சூ. 276,
உரை) எ - ம், “சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ” (அகநா. 46) எ - ம், “நீயே,
செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின், கைபுனை வல்வின் ஞாணுளர் தீயே”
(கலி. 7) எ - ம் முறையே காண்க.

     (பி - ம்.) 1 ஊரன்காண்டிக 2 பரிசில ருயிர்மார்

(21)

 

(440)

யாகா பிறபிறக் கரோபோ மாதிகும்
சின்குரை யோரும் போலு மிருந்திட்
டன்றாந் 1தாந்தான் கின்றுநின் றசைமொழி.

     எ - ன், யாமுதலிய அசைநிலையிடைச்சொற்களின் இயல்பு உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) இவ்விருபதிடைச்சொல்லும் அசைநிலைமொழிகளாம்எ - று.

     வ - று. “வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே, தோழியா சுவாகதம் போது
கீங்கென” (சீவக 1021) எ - ம், “அறநிழ லெனக்கொண்டா யாய்குடை யக்குடைப்,
புறநிழற்கீழ்ப் பட்டாளோ