விவளிவட் காண்டிகா” (கலி. 99) எ - ம், “மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ, ராயனை யல்லை பிறவோ வமரருள், ஞாயிற்றுப் புத்தேண் மகன்” (கலி. 108) எ - ம், “பிறத்தல் பிணிப்படன் மூத்த லிறத்தல், திறப்பட்ட நான்கினுந் தீர்விதற் கென்னென, இறத்தலு மாங்கொ லெனக்குமென் றெண்ணிப், பிறக்கதனுட் செல்லான் பெருந்தவப் பட்டான்” எ - ம், “தூதுவர் விடாராய்த் துறப்பார்கொ னோதக, இருங்குயி லாலுமரோ” (கலி. 33) எ - ம், “எரியினன்ன 2செந்தலை யன்றில், பிரியின் வாழா தென்போ 3மன்ற” எ - ம், “விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவெங் கண்ணே” (நற். 178) எ - ம், “கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே” (ஐங்குறு. 121 - 8) எ - ம், “சாந்த ஞெகிழி காட்டி, ஈங்கா கியவா லென்றுசின்” (நற். 55) எ - ம், “அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே” (புறநா. 5) எ - ம், “அஞ்சுவதோரு மறனே யொருவனை, வஞ்சிப்ப தோரு மவா” (குறள். 366) எ - ம், “வடுவென்ற கண்ணாய் வருந்தினை போலும்” எ - ம், “ஓராற்றா லென் கண் ணிமைபொருந்த வந்நிலையே, கூரார்வேன் மாறனென் கைப்பற்ற - வோரா, நனவென் றெழுந்திருந்தே னல்வினையொன் றில்லேன், கனவு மிழந்தொழிந்த வாறு” (முத்.), “அஞ்சீ ரசையியல் கூந்தற்கை நீட்டியா, னெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவட்டன், வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்” (கலி. 101), “தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே” (சீவக. 1)எ - ம், “பணியுமா மென்றும் பெருமை சிறுமை, அணியுமாந் தன்னை வியந்து” (குறள். 978) எ - ம், “தகைமிகு 4குழைதருந்தாந் தாவில் சீர்த் தம்மடிக்கண், முகைமிகு மலர்க்கண்ணி” எ - ம், “சாந்துய ரெவ்வ முழந்துறு தண்புனல், நீந்தியோர் மாண்பினை தோன்றலி னீதான்” எ - ம், “யான்பிற னளியன் வாழ்வா னாசைப்பட் டிருக்கின் றேனே” (சீவக. 1487) எ - ம், “அழலடைந்த மன்றத் 5தலந்தயரா நின்றார், நிழலடைந்தே நின்னை யென் றேத்திக் - கழலடைய” (பு. வெ. 3 : 7), ஊரினின்று வந்தார் எ - ம் முறையே வந்தவாறு காண்க.
(பி - ம்.) 1தந்தான் 2செழுந்தலை 3தெய்ய 4குழைதந்தார் தாவில்சீர்த் தம்மடிக்கண் 5அரந்தையராய் | (22) | நான்காவது இடைச்சொல்லியல் முற்றிற்று. | |
|
|