| 24 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | மெல்லினம் | | | (68) | மெல்லினம் ஙஞண நமனவென வாறே. | இதுவுமது.
(இ - ள்.) ங ஞ ண ந ம ன வென்னும் ஆறெழுத்தும் மெல்லின மென்னும் குறியவாம் எ - று. | இடையினம் | | | (69) | இடையினம் யரல வழளவென வாறே. | இதுவுமது.
(இ - ள்.) ய ர ல வ ழ ள வென்னும் ஆறெழுத்தும் இடையினமென்னும் குறியவாம் எ-று.
இம்மூவினமும் அன்னவாமாறு உச்சரித்துச் செவிகருவியாக 1ஓர்ந்து கொள்க.
பெயர் முற்றும்.
(பி - ம்.) 1 ஓர்ந்துணர்க | (15) | இனவெழுத்து | | | (70) | ஐஒள இஉச் செறிய முதலெழுத் திவ்விரண் டோரின மாய்1வரு முறையே. | எ - ன், நிறுத்தமுறையானே முறையாமாறு உணர்த்துவானெடுத்துக் கொண்டார்; அவற்றுள், இச்சூத்திரம் முதலெழுத்தை இனமடைத்தல் நுதலிற்று.
(இ - ள்.) ஐகாரத்தை இகரத்தோடும், ஒளகாரத்தை உகரத்தோடும் சேர்க்க, அகரமுதலான முதலெழுத்தெல்லாம் முறையே இவ்விரண்டெழுத்துத் தம்முள் இனமாம் எ - று.
வ - று. அஆ, 2இஈஐ, உஊஒள; எஏ, ஒஓ, க ங, ச ஞ, ட ண, த ந, ப ம, ய ர, ல வ, ழ ள, ற ன எனவரும்.
(பி - ம்.) 1 வரன்முறையே 2 இஈ, உஊ, எஏ, இஐ, ஒஓ, உஒள. | (16) | இனமென்றதற்குக்காரணம் | | | (71) | தான முயற்சி யளவு பொருள்வடி வானவொன் றாதியோர் புடையொப் பினமே. | எ - ன், மேல் இவ்வெழுத்து, ‘இவ்விரண்டோரினமாய்வரும்’ என்றார், அவை அப்படி வருவதற்குக் காரணமாமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) எழுத்துக்கள் தம் பிறப்பிடமே முயற்சியே 1மாத்திரையே பொருளே வடிவே யென்றிவற்றுள் ஒன்றானும் பலவானும் 2ஒரு புடையொப்பனவாயின், இனமாம் எ - று. | |
|
|