5. - உரிச்சொல்லியல்

241

   
     (இ - ள்.) உலகத்து உயிருள்ளதும் உயிரில்லாததுமாயடங்கும் இரு
வகைப்பொருள்களினுடைய குணம் பண்பாவது எ - று.

     (பி - ம்.) 1உயிருயிரல்லதாம்
 

(443)

மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின்
ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின்
ஓரறி வாதியா வுயிரைந் தாகும்.

     எ - ன், மேல், “உயிர்” என்றார், அவ்வுயிர்க்கூறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மெய்முதலான ஐந்தனுள்ளும் ஒன்றுமுதலாகக் கீழ் நின்ற
தனையுங்கொண்டு மேல்நின்றதுஅறிதலான்,ஓரறிவுயிர்முதலாக உயிர் ஐந்து கூறாம் எ-று.

(3)

 

(444)

புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர்.

     எ - ன், ஓரறிவுயிராவன உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மேற்சொன்ன ஓரறிவாதியான உயிர்களுட் புல்லும் மரமுமுதலானவை
ஊற்றானறியும் ஓரறிவினையுடைய உயிர்களாம் எ - று.

(4)

 

(445)

1முரணந் தாதிநா வறிவொடீ ரறிவுயிர்.

     எ - ன், ஈரறிவுயிராவன உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இப்பியும் நந்துமுதலானவை மெய்யுடனே நாவானுமறியும் அறிவுடன்
ஈரறிவினையுடைய உயிர்களாம் எ - று.

     (பி - ம்.) 1 (1) முறணந்தாதி; (2) உறணந்தாதி

(5)

 

(446)

சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர்.

     எ - ன், மூவறிவுயிராவன உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) கறையானையும் எறும்பையும் முதலாகவுடையன, கீழி லிரண்டொடு
மூக்கானுமறியும் அறிவுடன் மூவறிவுடைய உயிர்களாம்எ - று.

     இன்னை ஒடுப்பொருளிற் கொள்க.

(6)

 

(447)

1தும்பிஞெண் டாதிகண் ணறிவினா லறிவுயிர்.

     எ - ன், நான்கறிவுயிராவன உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) தும்பியும் 2ஞெண்டுமுதலான உயிர்கள் மேலனவற்றோடு
கண்ணானுமறியும் அறிவுடன் நான்கறிவுயிர்களாம்எ - று.

     (பி - ம்.) 1தும்பிவண்டாதி 2வண்டுமுதலான

(7)