242 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (448) | வானவர் மக்க ணரகர் விலங்குபுள் ஆதி செவியறிவோ டையறி வுயிரே. | எ - ன், ஐயறிவுயிராவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவை மேலனவற்றோடு செவியானும் அறியும் அறிவுடன் ஐந்தறிவினையுடைய உயிர்களாம் எ - று.
“ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே, இரண்டறி வதுவே யதனொடு நாவே, மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே, நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே, ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே”, “புல்லு மரனுமோரறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே”, “ 1நந்து முரளு மீரறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே”, “சிதலு மெறும்பு மூவறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே”, “ஞெண்டுந் தும்பியு நான்கறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே”, “ 2மாவு மாக்களு மையறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே” (மரபியல், 27 - 32) என்றார், ஆசிரியர் தொல்காப்பியனாருமென்க.
அஃதேல், அவர் ஆறறிவுயிரும் ஒன்றுண்டென்றாராலோவெனின், அவர் மனத்தையும் ஒருபொறியாக்கி, அதனான் உணருமக்களையும் விலங்கினுள் ஒருசாரனவற்றையும் ஆறறிவுயிரென்றார்; இவர் அம்மனக்காரிய மிகுதி குறைவாலுள்ள வாசியல்லது அஃது எல்லாவுயிர்க்கும் உண்டென் பார்மதம்பற்றி இவ்வாறுசொன்னாரென்க.
(பி - ம்.) 1நந்துமுறணும் 2மக்களுமாவும் | (8) | | (449) | உணர்விய லாமுயி ரொன்று மொழித்த உடன்முத லனைத்து முயிரில் பொருளே. | எ - ன், 1உயிரில்பொருளாவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) அறிவுமயமாயுள்ள உயிரொன்றையு மொழிந்து நின்ற உடம்புமுதலான உலகத்துப் பொருள்களெல்லாம் உயிரில்பொருள்களாம் எ - று.
(பி - ம்.) 1உயிரல் பொருளே | | (450) | ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும் வேற்றுமை நயத்தின் வேறே யுடலுயிர். | எ - ன், மேலதற்கு ஒருபுறநடையுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஒன்றுபட்டதன்மையான் ஒன்றுபோலத் தோன்றுவன வாயினும் வேறுபட்டதன்மையான் உடலும் உயிரும் தம்முள் வேறாம் எ - று.
இஃது என்னைசொன்னவாறோவெனின், மேல், புல்மர முதல உற்றறியும் ஓரறிவுயிரென்றற்றொடக்கத்தனவானவற்றையே உயிராக ஒற்றுமை பற்றிச் சொன்னாரெனினும் அவ்வுடல்களும் வேறே; உயிர்களும் வேறேயென்றவாறென்க. | |
|
|