உரிச்சொல்லேயென்றிவற்றுட் சொல்லா தொழிந்தன உளவாகிலும் அவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாகக் கொண்டு செலுத்துகவென்று குற்றம்வாராமல் நூலைப் பாதுகாத்தவாறெனக்கொள்க.
(பி - ம்.) 1றெளிவோர் திறனே 2சொல்லின் |
(20) |
| | (461) | பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே. |
எ - ன், இந்நூலிற்சொன்ன ஐந்ததிகாரத்திற்கும் சிங்கநோக்காய் நிற்பதொரு புறநடையுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) முற்காலத்துள்ளன சில விடுதலும் இக்காலத்துச் சில வருதலும் காலக்கூறுபாட்டினானே குன்றக்கூறல் மிகைபடக் கூறலென்னும் குற்றமாகா எ - று.
அவை.....அழன், புழன், “கேட்டையென்றா நின்றையென்றா,.......... கண்டை யென்றா” (தொல். எச்ச. 30) என்றற்றொடக்கத்தன அக்காலத் துள; இக்காலத்து வழங்கா. அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் எங்ஙனம் என்புழி ஙவ்வும், சம்பு சளி சரடு சரி சமழ்ப்பு சள்ளை என்புழிச் சகரமும் இக்காலத்து ஈண்டு மொழிக்கு முதலாயினவென்க. பிறவுமன்ன.
இவ்வாறே மேல்வரும் அதிகாரங்களிலும் கண்டுகொள்க. |
(21) |
ஐந்தாவது உரிச்சொல்லியல் முற்றிற்று. |
கட்டளைக்கலித்துறை |
| | | இருதிணை மூவிட நான்மொழி யைம்பா லறுதொகையேழ் அருவழு வெட்டுரு பொன்பான் றொகாநிலை யாய்ந்தவெச்சம் ஒருபது கோளெட்டு முப்பொழு தீரிட மோரியல்பாய் வருமொழி மூன்று முணரச்சொல் வண்மை வருந்திருவே. |
வெண்பா
|
| | | பேரறு பத்திரண்டு பின்வினையெண் ணான்குபொது ஓரறுபத் 1தெட்டிடை மூவேழின் - மேலொன் றுரியிருபத் தொன்றாகச் சொற்சூத் திரத்தின் விரி2யிருநூற் றோரைந்தா வேண்டு. |
(பி - ம்.) 1தெட்டிடையின் 2யிருநூற்றீரிரண்டா |
இரண்டாவது சொல்லதிகாரம் முற்றிற்று. |
| சொல்லும் பொருளுமெனத் தோன்றித்தோன் றாத்துணையை அல்லும் பகலு மடை. |