(இ - ள்.) மேற்கூறியநெறியாற் பிறக்குமிடத்துப் பன்னீருயிருக்கும் இடையினம் ஆறிற்கும் இடம் மிடறாகும்; மெல்லினமாறும் மூக்கை இடமாகப்பொருந்தும்; வல்லினமாறும் நெஞ்சை இடமாகப்பெறும்எ - று. |
(20) |
| |
முதலெழுத்துக்களின் முயற்சிப்பிறப்பு |
| | (75) | அவற்றுள், முயற்சியுள் அஆ வங்காப் புடைய. |
எ - ன், அகர ஆகாரங்கட்கு முயற்சியாமாறுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மேல் இடம் வகுக்கப்பட்ட முதலெழுத்துக்களுள், அகரமும் ஆகாரமும் அங்காந்துசொல்லுதலை முயற்சியாகவுடையவாம் எ - று.
ஆ ஆ என உச்சரித்துக் கண்டுகொள்க. |
(21) |
| | (76) | இஈ எஏ ஐயங் காப்போ டண்பன் முதனா விளிம்புற வருமே. |
எ - ன், இவ் வைந்தெழுத்துக்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இக்கூறப்பட்ட ஐந்தெழுத்தும் அங்காப்புடனே அண்பல்லை முதனாவிளிம்பு உறும் முயற்சியாற்பிறக்கும் எ - று.
இ ஈ எ ஏ ஐ என உச்சரித்துக் கண்டுகொள்க. |
(22) |
| | (77) | உஊ ஒஓ ஒளவிதழ் குவிவே. |
எ - ன், இவ்வைந்துயிருக்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) 1இக்கூறப்பட்ட ஐந்தெழுத்தும் இதழைக்குவித்துச் சொல்லு முயற்சியாற் பிறக்கும் எ - று.
உ ஊ ஒ ஓ ஒள என உச்சரித்துக் கண்டுகொள்க.
(பி - ம்.) 1இக்கூற்றைந்தெழுத்தும் |
(23) |
| | (78) | கஙவுஞ் சஞவும் டணவு முதலிடை நுனிநா வண்ண முறமுறை வருமே. |
எ - ன், இவ்வாறெழுத்துக்கும் முயற்சியாமாறுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) 1ககரமும் ஙகரமும் முதல்நா முதலண்ணத்தை உறிஞ்சப் பிறக்கும்; சகரமும் ஞகரமும் இடைநா இடையண்ணத்தை உரிஞ்சப் பிறக்கும்; டகரமும் ணகரமும் நுனிநா நுனியண்ணத்தை உரிஞ்சப் பிறக்கும் எ - று.
கங சஞ டண என உச்சரித்துக் கண்டுகொள்க.
(பி - ம்.) 1ககாரமும் ஙகாரமும் பின்னும் இப்படியே. |
(24) |
| | (79) | அண்ப லடிநா முடியுறத் தநவரும். |
| எ - ன், இவ்விரண்டிற்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. |