28

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (இ - ள்.) அண்பலடியை நாநுனி ஒற்றத் தகரமும் நகரமும் பிறக்கும். எ - று.

     த ந என உச்சரித்துக் கண்டுகொள்க.

(25)

     

(80)

மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும்.

     எ - ன், இவ்விரண்டெழுத்திற்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மேலிதழும் கீழிதழுமேவப் பகரமும் மகரமும் பிறக்கும் எ - று.

     ப ம என உச்சரித்துக் கண்டுகொள்க.

(26)

     

(81)

அடிநா வடியண முறயத் தோன்றும்.
     எ - ன், யகரத்திற்கு முயற்சியாமாறு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) அடிநா அடியண்ணத்தைச்சார யகரம் பிறக்கும் எ-று.

     ய என உச்சரித்துக் கண்டுகொள்க.

(27)

     

(82)

அண்ண நுனிநா வருட ரழவரும்.

     எ - ன், இவ்விரண்டெழுத்திற்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) அண்ணத்தை நுனிநாத் தடவ ரகரமும் ழகரமும் பிறக்கும் எ - று.

     ர ழ என உச்சரித்துக் கண்டுகொள்க.
 

(28)

 

(83)

அண்பன் முதலு மண்ணமு முறையின்
நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும்
லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்.

     எ - ன், இவ்விரண்டெழுத்திற்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) அண்பல்முதலை நாவிளிம்பு புடைத்து ஒற்ற லகரம் பிறக்கும்;
அண்ணத்தை நாவிளிம்பு வீங்கி மெல்ல உற ளகரம் பிறக்கும் எ - று.

     ல ள என உச்சரித்துக் கண்டுகொள்க.
 

(29)

 

(84)

மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே.

     எ - ன், வகரத்திற்கு முயற்சியாமாறு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) மேற்பல்லானது கீழிதழை உற வகரம் பிறக்கும் எ-று.
வ என உச்சரித்துக் கண்டுகொள்க.
 
 

(85)

அண்ணா நுனிநா நனியுற றனவரும்.

     எ - ன், இவ்விரண்டெழுத்திற்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.