| | நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ |
| 5 | டெண்ணான் குத்தியி னோத்துப் படலம் என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே.s |
(இ - ள்.) இவ்வியல்பினது 1நூலாவது எ - று. ஓரிருபாயிரந்தோற்றலாவது பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமும் முன்னுடைத்தாதல். ஏனைப்பகுதிகளைத் 2தத்தம் இலக்கணச்சூத்திரத்துட்காண்க. (பி - ம்.) 1நூலென்றவாறு 2தத்தம்சூத்திரத் |
(4) |
நூலின் வகை |
| (5) | *முதல்வழி 1புடையென நூன்மூன் றாகும். |
(இ - ள்.) இம்மூன்றுகூற்றதாம் நூல். எ - று. (பி - ம்.) 2சார்பென |
(5) |
முதல்நூல் |
| (6) | அவற்றுள், - (வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். |
(இ - ள்.) இவ்வகையால்வருவது 1முதனூலாவது எ - று. (பி - ம்.) 1முதனூலென்றவாறு |
(6) |
வழிநூல் |
| (7) | முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநூ லாகும். |
(இ - ள்.) இவ்வகையால்வருவது 1வழிநூலாவது எ - று. (பி - ம்.) 1வழிநூல் |
(7) |
புடைநூல் |
| (8) | இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநூ லாகும். |
* இச்சூத்திரமுதலியநான்கும் இறையனாரகப்பொருள் முதற்சூத்திரவுரையிலும், யாப்பருங்கலம் முதற்சூத்திரவுரையிலும் காணப்படுகின்றன. ( தொல்காப்பியம், மரபியல், 94. |