| 30 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (இ - ள்.) இச்சொன்னபெற்றியிற் றிரியாதுவருவது உயிர்மெய் எ - று.
எனவே ஒருமெய் அகரத்தோடு முன்னருருவேயாகியும், ஒழிந்த உயிர்களோடு உருவுவேறுபட்டும் வருமென்பது போந்தது. போதவே பதினெட்டுமெய்யும் பன்னிரண்டுயிரோடுங்கூடிப் பன்னிரு பதினெட்டு இருநூற்றொருபத்தாறாய் மேற்சொன்ன விரியான் வந்தவாறு கண்டு கொள்க.
வ - று. க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ என வரும். ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. உயிர்மெய் யென்பது உம்மைத் தொகை.
(பி - ம்.) 1முன்னுருவு 2டுருவு 3திரிந்துமுயிரளவாய் | (34) | முற்றாய்தம் | | | (89) | குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே. | எ - ன், நிறுத்தமுறையானே ஒருமொழியிடத்துவரும் முற்றாய்தத் தோற்றமாமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) குற்றெழுத்தின் முன்னர் உயிரோடு கூடிய வல்லெழுத்து ஆறன்மிசையே பெறப்படும், ஆய்தவொற்று எ - று.
ஆய்தமானபுள்ளி ஆய்தப்புள்ளி. ‘ஆய்தப்புள்ளி’ என்றார், இதனையும் ஒற்றின்பாற் சார்த்துதற்கென்க. ஒற்றேல் உயிரேறப் பெறல்வேண்டுமெனின், சார்பெழுத்தாதலின் உயிரேறப் பெறாதெனக்கொள்க.
வ - று. எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு எனவரும். அஃகாமை, வெஃகாமை, அஃகி, வெஃகி, 1அஃகோ என்பன பிறவுயிர்களோடும் வந்தன. 2 “விலஃஃகி வீங்கிரு ளோட்டுமே மாதர், இலஃஃகு முத்தினினம்” என இவ்வாறு குறிலிணைக்கீழும் ஆய்தம் வருமாலோவெனின், அன்ன இயல்பாகவே ஆய்தமாய் நிற்பனவல்ல. ஓசை நிறைத்தற்பொருட்டு ஒற்றில்வழி ஒற்றாக்குதலின், ஈண்டு ஆய்தமும் ஒற்றாய்வருமெனக்கொள்க. இருபஃது, அஃகடிய எனப் புணர்ச்சியிடத்து வரும் ஆய்தங்களை அவ்விதியிற்காண்க.
(பி - ம்.) 1அஃகா, அஃதோ 2விலஃஃகு | (35) | உயிரளபெடை | | | (90) | இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில் அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே. | எ - ன், வைத்தமுறையானே உயிரளபெடைத் தோற்றமாமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) செய்யுட்கள் ஓசை சிதைய வந்தவிடத்து மொழிமுதலிடை கடையென்னும் மூன்றிடத்தும்நின்ற நெட்டெழுத்துக்கள்தாம் இரண்டு |
* ‘அஃகாமை’ முதலிய ஐந்தும் சிலபிரதிகளில் இல்லை. | |
|
|