34

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (இ - ள்.) ளகர லகரந்திரிந்த ணகரனகரங்கண்முன்பும் வகரமிசையும் நின்ற மகரம்
குறுகும் எ-று.

     வ - று. “பசுப்போல்வார் முற்பட்டாற் பாற்பட்ட சான்றோர், முசுப்போல
முள்காந் திருப்பார் - பசுத்தான், வெருளினுமெல்லாம் வெருளுமஃ தன்றி, மருளினு
மெல்லா மருண்ம்”, “எம்மொடு தம்மைப் பொரூஉங்காற் பொன்னொடு,
1கூவிளமொத்ததும் போன்ம்”, வாழும்வளவன் எனவரும்.

     (பி - ம்.) 1கூவிளம்பூத்ததும், கூவிளம்போர்த்ததும்.
 

(41)

     

(96)

லளவீற் றியைபினா மாய்த மஃகும்.
     எ - ன். ஆய்தக்குறுக்கமாமாறு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) லகரளகரவீறு புணர்வுழிவரும் ஆய்தம் குறுகும் எ-று.

     வ - று. கஃறீது, முஃடீது எனவரும்.
     பிறப்புமுற்றும்.

(42)

5. எழுத்தின் உருவம்

     

(97)

தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண்
டெய்து மெகர மொகரமெய் புள்ளி.
     எ - ன், நிறுத்தமுறையானே வடிவாமாறு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) எல்லாவெழுத்தும் பழையவாகி வருகின்ற வரிவடிவினவேயாம்;
அவ்விடத்து எகரமும் ஒகரமும் மெய்களும் புள்ளிபெற்று நிற்பனவாம் எ - று.

     வ - று. எரி, எரி; 1ஒளி, ஒளி; உல்கு, உலகு; மண்மகள், மணமகள்; கண்மணி,
கணமணி எனக் கண்டுகொள்க. ‘ஆண்டு’ என்ற மிகையானே, தாது, ஏது
என்றற்றொடக்கத்து ஆரியமொழிகளும், எட்டு, கொட்டு என்றற்றொடக்கத்துப்
பொதுமொழிகளும், குன்றியாது, 2நாடியாது, எட்டியாண்டுளது என்றற்றொடக்கத்துப்
புணர்மொழிப்பொருள் வேறுபாடுகளும் அறிதற்பொருட்டுக் 3குற்றுகரக் குற்றிகரங்களுக்கு
மேற் புள்ளிகொடுப்பாரும் உளரெனக் கொள்க.

     உருவமுற்றும்.

     (பி - ம்.) 1ஒதி, 2மாடியாது 3குற்றிகரக்குற்றுகரங்கட்கு

(43)

6. எழுத்தின்மாத்திரை

     

(98)

மூன்றுயி ரளபிரண் டாநெடி லொன்றே
குறிலோ டையௌக் குறுக்க மொற்றள
பரையொற் றிஉக் குறுக்க மாய்தம்
கால்குறண் மஃகா னாய்த மாத்திரை.