எ - ன், நிறுத்தமுறையானே எல்லாவெழுத்திற்கும் அளவாமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) உயிரளபெடை மூன்றும், நெட்டெழுத்து இரண்டும் குற்றெழுத்தும் ஐகாரக்குறுக்கமும் ஒளகாரக்குறுக்கமும் 1ஒற்றளபெடையு மென்னுநான்கும் ஓரொன்று ஒன்றும், மெய்களும் குற்றியலுகரங்களும் ஆய்தமும் ஓரொன்றுஅரையும் மகரக்குறுக்கமும் ஆய்தக்குறுக்கமும் ஓரொன்று2காலும் மாத்திரைகளளவாகவுடையவாம் எ - று.
அன்னவாதல் அவற்றிற்கு மேற்காட்டிய உதாரணங்களுட் காண்க.
(பி - ம்.) 1ஒற்றளபெடையும் இவைநான்கும். 2காலும்அளபாக. |
(44) |
ஐகாரக்குறுக்கமும் ஒளகாரக்குறுக்கமும் |
| | (99) | இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை. |
எ - ன், மேல் எழுத்திற்கு அளவு மாத்திரையென்றார், ஈண்டு அம்மாத்திரையாவது இஃதென்பது உணர்த்துதல்நுதலிற்று. (இ - ள்.) விகாரப்படாதே இயல்பாக எழாநின்ற மாந்தருடைய கண்ணிமையும் கைந்நொடியும் ஆண்டுச்சொன்னமாத்திரைக்கு அளவாம் எ - று. கட்புலனாகிய இமைக்காலமும் செவிப்புலனாகிய நொடிக்காலமும் கருதிக் 1கோடற்கு இரண்டும் ஓதினாரென்க. (பி - ம்.) 1கொண்டற்கு |
| (45) |
| | (100) | ஆவியு மொற்று 1மளவிறந் திசைத்தலும் மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின். |
எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று. (இ - ள்.) உயிரும் ஒற்றுமென்னும் இருகூற்றெழுத்தும் தமக்குச் சொன்ன மாத்திரைகளின் மிக்கிசைக்கவும்பெறும், இசையும் விளியும் பண்டமாற்றும் முதலானவற்றின்கண் எ - று. ‘ஆதி’ என்றதனால், நாவலும் முறையீடும் புலம்பும் குறிப்பிசை முதலாயினவுங்கொள்க. 2 “கஃறென்னுங் கல்லதரத்தம்” என்பது குறிப்பிசை. ஏனைய வந்துழிக்காண்க. உயிர் பன்னிரண்டுமாத்திரையும் ஒற்றுப் பதினொருமாத்திரையும் நீளுமென்றார் கந்தருவநூலுடையார். அவை வந்த வழிக்காண்க. நாவல் - போர்க்கழைத்தல். மாத்திரைமுற்றும். (பி - ம்.) 1 அளபிறந்து 2கல்லென்னும் |
| 7. முதல்நிலை |
| | (101) | பன்னீ ருயிருங் கசதந பமவய ஞஙவீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல். |
எ - ன், நிறுத்தமுறையானே மொழிக்கு முதலாமெழுத்தாவன உணர்த்துதல்நுதலிற்று. (இ - ள்.) இச்சொல்லப்பட்ட இருபத்திரண்டெழுத்தும் பொதுவகையால் மொழிக்குமுதலாம் எ - று. |