(இ - ள்.) இந்நாலுயிரோடுங்கூடி ஞகரம் மொழிக்குமுதலாம்எ - று.
(வ - று.) 1ஞமன், 2ஞாலம், 3ஞெகிழ்ந்தது, ஞொள்கிற்று என வரும்.
(பி - ம்.) 1ஞமலி 2ஞானம் 3ஞொளிந்தது | (50) | | | (105) | 1சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி ஙவ்வு முதலா கும்மே. | இதுவுமது. (இ - ள்.) மூன்றுசுட்டிற்கும் யாவும் எகரமுமாய வினாக்களுக்கும் வழியே 2அகரத்தோடுங்கூடி ஙகரம் மொழிக்குமுதலாம். எ - று. (வ - று.) அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் எனவரும். உம்மை இறந்ததுதழீஇயஎச்சவும்மை. * “சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி, சளிசகடு சட்டை சவளி - சவிசரடு, சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும், வந்தனவாற் சம்முதலும் வை.” “குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி, னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும்” (மொழிமரபு, 34) என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாமென்றாராலோவெனின், “நுந்தையுகரங் குறுகி மொழிமுதற்கண், வந்த தெனினுயிர்மெய் யாமனைத்தும் - சந்திக், குயிர்முதலா 3வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி, மயலணையு மென்றதனை மாற்று.” இவற்றை விரித்துரைத்து விதியும் விலக்கும் அறிந்துகொள்க. மொழிமுதல் முற்றும். (பி - ம்.) 1சுட்டுயா 2அகரத்தோடு ஙகரம் 3வந்தனைய | | (51) | | 8. ஈற்றுநிலை | | | (106) | ஆவி ஞணநம னயரல வழளமெய் சாயு முகர நாலாறு மீறே. | எ - ன், நிறுத்தமுறையானே மொழிக்கு ஈற்றெழுத்தாவன உணர்த்துதல்நுதலிற்று. (இ - ள்.) இச்சொல்லப்பட்ட உயிரும் மெய்யும் குற்றுகரமுமாகிய இருபத்துநாலெழுத்தும் மொழிக்கு ஈறாவனவாம் எ - று. வ - று. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனவும்; உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் எனவும், 1அஃகு எனவும் வரும். இவை பொதுவிதியாற் போந்தன. ஏனைய வருஞ்சூத்தி ரத்திற் பெறுதும். குற்றுகரமும் உயிராயடங்குமெனினும் புணர்ச்சி முதலான வேறுபாடுண்மைநோக்கி வேறெடுத்தோதினாரென்க. (பி - ம்.) 1எஃகு | | (52) | | | (107) | குற்றுயி ரளபி னீறா மெகரம் மெய்யொ டேலா தொந்நவ் வொடா1மௌ ககர வகரமொ டாகு மென்ப. |
* இது, “சகரக் கிளவியு மவற்றோரற்றே” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தை மறுத்துரைப்பார்கூற்றுப்போலும். | | | | | | | |
|
|