| 38 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | எ - ன், குற்றுயிர்க்குப் பொதுவிதிமாற்றிச் சிறப்புவிதியும், எல்லா வுயிர்க்கும் பொதுவிதியின்மேற் சிறப்புவிதியும் உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) குற்றுயிர் அளபின் ஈறாம் எ - து, குற்றுயிரைந்தும் தாமே நின்று ஈறாகா, அளபெடுப்புழி ஈறாம் எ - று.வ - று. ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என வரும்.
எகரம் மெய்யோடு ஏலாது எ - து, எகரம் மெய்களோடு கூடி நின்று ஈறாகாது எ-று.
ஒ நவ்வொடு ஆம் எ - து, ஒகரம் நகரமொன்றுடனே கூடி நின்று ஈறாம் எ-று.
வ - று. நொ எனவரும்.
ஒள ககர வகரமொடு ஆகும் எ - து, ஒளகாரம் ககரத்தோடும் வகரத்தோடுங் கூடிநின்று ஈறாம் எ - று.
வ - று. கௌ, வௌ எனவரும்.
என்ப எ - து, என்றுசொல்லுவர் புலவர் எ - று.
எனவே, உயிர்கள் தாமேநின்றும் அளபெடுப்புழி நின்றும் ஈறாதலேயன்றி, ஒகரம் நகரத்துடனும், ஒளகாரம் ககர வகரங்களுடனும், எகர மொழிந்த ஏனைய ஒன்பதுயிரும் தமக்கேற்ற மெய்களுடனும் கூடிநின்று ஈறாம் எ - று.
எகர ஒகர ஒளகாரங்களை விதந்தோதினமையான், ஏனை உயிர்கள் தமக்கேற்ற மெய்களோடு ஈறாமென்பது தாமேபோதருமெனக்கொள்க.
வ - று. வாழ்க, 2மூங்கா, 3பெருங்கி, 4பெருங்கீ, 5பங்கு, 6கூ, எங்கே, எங்கை, எங்கோ எனவரும். இவ்வாறே ஏற்கும் பிறமெய்களோடும் ஒட்டிக்கொள்க. ஏற்குமென்பது எற்றாற்பெறுதுமோவெனின், சூத்திரத்து எடுத்தோதாது ஞாபகவகையாற் சொற்றமையாற் பெறுதும்.
(பி - ம்.) 1 ஒளக்ககர 2 பூங்கா 3 (1) பருங்கி (2) பிருங்கி,4 பெருகீ 5 பெருகு 6 (1) பெருகூ (2) பங்கூ. | (53) | | | (108) | நின்ற நெறியே யுயிர்மெய் முதலீறே. | எ - ன், உயிர்மெய் முதலும் ஈறுமாமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) ஒற்றுமுன்னும், உயிர் பின்னுமாய் நிற்றலின் உயிர்மெய்யானது மெய்முதல் மொழியென்றும் உயிரீற்றுமொழியென்று மாவதன்றி உயிர்மெய்முதலென்றும் உயிர்மெய் ஈறென்றும் வழங்கப்படாது எ - று.
ஈறு முற்றும். | (54) | 9. இடைநிலை | | | (109) | கசதப வொழித்தவீ ரேழன் கூட்டம் மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரெட் டாகுமிவ் விருபான் மயக்கு மொழியிடை மேவு முயிர்மெய் மயக்கள வின்றே. | |
|
|