4

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (இ - ள்.) இப்பெற்றியான்வருவது சார்புநூலாவது எ - று.
     இம்மூன்றனுள் ஒன்றாய்வருவது நூலென்றறிக.
     தொல்லாசிரியர் சூத்திரங்களை ஈண்டுவைத்துப் பயந்தது என்னையோவெனின், உண்டு பயந்தது; யாது?
 

 

* “முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும்
பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும் - முன்னோரின்
வேறுநூல் செய்துமெனு மேற்கோளில் லென்பதற்கும்
கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்”
     என்பதனாற்கொள்க.என்பதனாற்கொள்க.

(8)

நாற்பொருட்பயன்

 

(9)

( அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே.
     (இ - ள்.) இந்நாற்பொருளையும்பெறுதல் நூற்குப்பயனாவது எ-று.

(9)

எழுமதம்

 

(10)

( எழுவகை மதமே 1யுடம்படன் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோ ளொருதலை துணிவே
 

5

பிறர்நூற் குற்றங் காட்ட லேனைப்
பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே.
 
     (இ - ள்.) இவ்வெழுமதமும்படவருதல் நூற்கு இயல்பு எ - று
     (பி - ம்.) 1யுடன்படல்

(10)

பத்துக்குற்றம்

 

(11)

குன்றக் கூறன் மிகைபடக் கூறல்
கூறியது கூறன் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தன் மற்றொன்று விரித்தல்

     * இம்மேற்கோளைப் பிற்காலத்தார் தனிச்சூத்திரமாக வழங்கினர்.
     ( இதுமுதலிய ஐந்துசூத்திரங்களிலுள்ள சொற்றொடர்களை எடுத்துக் காட்டி,
     இவ்வாறுசொன்னார் பாடலனாரென்னுமாசிரியரென்பர் குணசாகரர்
      (காரிகை, ஒழிபு அ, உரை.)
     ( இச்சூத்திரமுதலியமூன்று, யாப்பருங்கலம், முதற்சூத்திரவுரை முதலியவற்றிலுமுள்ளன.