38 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (114) | மம்முன் பயவ மயங்கு மென்ப. | எ - ன், மகரமெய்ம்மயக்கம் உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) மகரமெய்ம்முன்னர்ப் பகர யகர வகரங்கள் வந்து மயங்கும் எ - று.
வ - று. கம்பன், 1கலம்யாது, 2கலம்வலிது எனவரும்.
(பி - ம்.) 1காலம் யாது 2காலம் வலிது | (60) | | (115) | யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும். | எ - ன், யகர ரகர ழகர மெய்ம்மயக்கம் உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) இம்மூன்றன்முன்னரும் மொழிமுதலான பத்தினுள்ளும் 1ஙகரமொழித்து ஒழிந்த ஒன்பதுமெய்யும் மயங்கும் எ - று.ஙகரம் ஈண்டு விலக்கிற்றில்லையாலோ வெனின், அது, 2தன் விதிச்சூத்திரத்தினுள்ளே இன்னவிடத்துவருமென்று இடங்குறித்துச் சொன்னமையாற் 3பிறவழிவாராதெனக் கொள்க.
வ - று. (வேய், வேர், வீழ்) + (கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது) எனவரும்.
(பி - ம்.) 1ஙகாரமொழிந்த ஒன்பதுமெய்யும் 2 (1) அதன் தனி விதிச்சூத்திரத்தினுள்ளே (2) விதிச்சூத்திரத்தினுள்ளே 3 பிறவுழி | | (116) | லளமுன் கசப வயவொன் றும்மே | எ - ன், லகர ளகர மெய்ம்மயக்கம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்விரண்டு மெய்ம்முன்னரும் க ச ப வ ய வென்னும் ஐந்துமெய்யும் மயங்கும் எ - று.
வ - று. (வேல், வாள்) + (கடிது, சிறிது, பெரிது, வலிது, யாது) எனவரும்.
மெய்ம்மயக்கம் முற்றும். | (62) | உடனிலை மயக்கம் | | (117) | ரழவல் லனதம்முற் றாமுட னிலையும். | எ - ன், உடனிலைமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ரகரழகரமொழித்து ஒழிந்த பதினாறுமெய்யும் தம்முன் னர்த் தாம்வந்து 1மயங்கும். எ - று.
வ - று. அருக்கன், அங்ஙனம், அச்சு, மஞ்ஞை, மட்டை, மண்ணை, வித்து, வெந்நெய், அப்பி, அம்மி, அய்யர், அல்லி, அவ்வை, கள்ளி, கற்றை, கன்னி எனவரும்.
(பி - ம்.) 1மயங்குவது உடனிலைமயக்கமாம். | (63) | | (118) | யரழவொற் றின்முன் கசதப ஙஞநம ஈரொற் றாம்ரழத் தனிக்குறி லணையா. | எ - ன், ஈரொற்றுடனிலையாமாறும் 1தனிக்குறிற்கீழ் ஒற்றாகாதனவும் உணர்த்துதல் நுதலிற்று. | |
|
|