(இ - ள்.) யரழவென்னும் மூன்றுமெய்ம்முன்னும் கசதபஙஞநம வென்னும் இவ்வெட்டொற்றும் வந்து ஈரொற்றுடனிலையாய் நிற்கும். எவ்விடத்தும் தனிக்குறின்முன்னர் ரகரழகரங்கள்வந்து ஒற்றாய் நில்லா எ - று.
வ - று. வேய்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை; சிறை, தலை, புறம் எனவும், வேய்ங்குறை, வேர்ங்குறை, வீழ்ங்குறை; சிறை, தலை, புறம் எனவும் கசதப ஙஞநமக்கள் ஈரொற்றாய் வந்தவாறு காண்க. ஆகாதனவற்றிற்கு யாண்டும் காட்டாவன இல்லையெனக் கொள்க.
(பி - ம்.) 1ரகார ழகாரங்கள் தனிக்குறிற்கீழ் ஒற்றாகாதெனவும் | (64) | | (119) | லளமெய் திரிந்த னணமுன் மகாரம் நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே. | எ - ன், செய்யுட்குரிய ஈரொற்றுடனிலைமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) லகரளகரங்கள் திரிந்த னகரணகரங்கண்முன் மகரம் கால்மாத்திரையாய் ஈரொற்றாய் நிற்கும், செய்யுட்கண் எ - று. வ - று. “சிதையுங் கலத்தைப் பயினாற் 1றிருத்தித், திசையறி 2நீகானும் போன்ம்” (பரி. 10), “வெயிலியல் வெஞ்சுர மையநீ யேகின், மயிலியன் மாதர் மருண்ம்” எனவரும். (பி - ம்.) 1திருத்துந் 2மீகானும் | (65) | | (120) | தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும் இம்முறை மாறியு மியலு மென்ப. | எ - ன், முதனிலை இடைநிலைகட்கு உரியதோர் வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) எழுத்துக்கள் தம்பெயர்களை மொழியுமிடத்து ஈண்டுச் சொன்னமுறையன்றி முதலாகாதன முதலாகியும் மயங்காதன மங்கியும் வரப்பெறும் எ-று. வ - று. “அவற்றுள், லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்” (தொல். நூன்மரபு, 24) என்பதனுள், ளகரமெய்ம்முன்னர் லகரம் மயங்கினவாறும், லகரம் மொழிக்கு முதலானவாறுங் காண்க. | (66) | | (121) | மகர விறுதி யஃறிணைப் பெயரின் னகரமோ டுறழா நடப்பன வுளவே. | எ - ன், இதுவும் ஓர் மயக்கவகையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மகரவீறான அஃறிணைப்பெயர்களுட்சில னகரத்தோடு உறழ்ந்துவருவன உள எ - று. வ - று. நிலம், நிலன்; புலம் புலன்; கலம், கலன்; வலம், வலன்; முகம், முகன்; அகம், அகன் என்றற்றொடக்கத்தன உறழ்ந்தன; ‘உறழா நடப்பனவுள’ எனவே, உறழாதன பெரும்பான்மையவாமெனக் கொள்க. அவை: வட்டம், பட்டம், குட்டம், மாடம், கூடம், கடாம், படாம், கடகம், 1சடகம், நுகம், மகம், ஆரம், பூரம், உத்தரம், 2வீக்கம், நோக்கம், 3ஊக்கம்் | | | | |
|
|