1. - எழுத்தியல்

43

   
     எ - ன், நிறுத்தமுறையானே போலியெழுத்தாமாறு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) அகரமுன் இகரமும் யகரமும் வரின் ஐகாரஓசைபோல இசைக்கும்;
அகரத்தின்முன் உகரமும் வகரமும்வரின் ஒளகாரஓசைபோல இசைக்கும் எ -று.

     போலவிசைக்குமெனவே அவை ஆகா; போலியாமெனக் கொள்க.

     வ - று. அஇவனம், அய்வனம் - ஐவனம்; மஉவல், மவ்வல் - மௌவல்
எனவரும்.

(70)

எழுத்தின் சாரியை

 

(125)

மெய்க ளகரமு நெட்டுயிர் காரமும்
1ஐஒள கானு மிருமைக் குறிலிவ்
விரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும்பிற.

     எ - ன், அதிகரித்தமுறையானே எழுத்தின்பகுதியான எண் முதற் பத்துமுணர்த்தி
அவ்வெழுத்து வழங்குதற்குவரும் சாரியை உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மெய்பதினெட்டும் அகரத்தையும், நெட்டுயிரேழும் காரத்தையும்,
ஐகாரஒளகாரங்கள் காரத்துடனேகானையும், உயிரும் உயிர்மெய்யுமான
குற்றெழுத்தைந்தும் காரம் கான்களுடனே கரமென்பதையும் சாரியையாகச்
சார்ந்துநடக்கும் எ - று.

     வ - று. க ங ச ஞ..........ற ன; ஆகாரம் ஈகாரம் ஊகாரம் ஏகாரம் ஐகாரம்
ஓகாரம் ஒளகாரம்; ஐகான் ஒளகான்; அகாரம் இகாரம் உகாரம் எகாரம் ஒகாரம் ககாரம்
ஙகாரம்.....றகாரம் னகாரம், அஃகான், னஃகான்; அகரம் இகரம் உகரம் எகரம் ஒகரம்
ககரம்....னகரம் எனவரும். ‘பிற’ என்றமிகையானே கான்வருங்காலை ஆய்தமும், 2ஆன
ஏன முதலானவுங் கொள்க.

     (பி - ம்.) 1ஐ ஒளக்கானும் 2(1) ஆனும் ஏனும் ஓனும் அம்முதலானவும் (2) ஆனும்
ஏனும் அம்முதலானவும் (3) ஆனும் ஏனுவும் ஆனமுதலானவும்

(71)

புறநடை

 

(126)

மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே.

     எ - ன், எனைவகையெழுத்திற்கும் இயைவதோரிலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) எழுத்துக்கள் பலவற்றையுங்கூட்டி நெருக்கி ஒரு தொடர்
படக்கூறுமிடத்தும் தத்தம்வடிவும் அளவும் முதலாயின இயற்பிற்றிரியா; தனித்து
நின்றாற்போலும், யாண்டும் எ - று.

     வ - று. மறு 1மற்று; மறை 2மற்றை எனவும், “கற்க கசடறக் கற்பவை கற்றபி,
னிற்க வதற்குத் தக” (குறள் 391) எனவும் வரும். இவற்றுள் அவ்வாறாதல் காண்க.

     (பி - ம்.) 1மன்று 2மாறை

(72)

முதலாவது எழுத்தியல் முற்றிற்று.