| 5 | சென்றுதேய்ந் திறுத னின்றுபய னின்மை என்றிவை யீரைங் குற்ற நூற்கே. |
(இ - ள்.) இப்பத்துக்குற்றமும் சாராமல்வருவது நூலாவது எ-று. |
(11) |
பத்துஅழகு |
| (12) | சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல் ஓசை யுடைமை யாழமுடைத் தாதல் முறையின் வைப்பே யுலகமலை யாமை |
| 5 | விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த தாகுத னூலிற் கழகெனும் பத்தே. |
(இ - ள்.) இப்பத்து 1மாட்சியும் வேண்டும்நூற்கு எ - று. (பி - ம்.) 1மாட்சிமையுடைத்தாதல் வேண்டும் நூல் |
(12) |
முப்பத்திரண்டு உத்தி |
| (13) | நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல் முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல் தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல் |
| 5 | சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல் இரட்டுற மொழித லேதுவின் முடித்தல் ஒப்பின் முடித்தன் 1மாட்டெறிந் தொழுகல் இறந்தது விலக்க லெதிரது போற்றல் முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் |
| 10 | விகற்பத்தின் முடித்தன் 2முடிந்தவை முடித்தல் உரைத்து மென்ற 3லுரைத்தா மென்றல் ஒருதலை துணித லெடுத்துக் காட்டல் எடுத்த மொழியி னெய்த வைத்தல் இன்ன தல்ல திதுவென மொழிதல் |
| 15 | எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல் பிறநூன் முடிந்தது 4தானுடம் படுதல் தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல் சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் 5ஒன்றின முடித்த றன்னின முடித்தல் |
| 20 | உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே. |