60 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | எனவும், அருகன், சிங்கம், மோகம் எனவும் முப்பத்துமூன்றாமெய் அகரமும் ககரமு மாயிற்று. பக்கம், தக்கணம் (தெற்கு - பாதகச் சிதைவு) என முப்பத்தைந்தாம் கூட்டெழுத்து ஈறு கெட்டு இரண்டு ககரமாயிற்று.
வேலை, சாலை, மாலை, உவமை, வனிதை என ஆகாரவீறு ஐகாரமாயிற்று. புரி, மேதினி, குமாரி, நீதினி என ஈகாரவீறு இகரமாயிற்று. இவை பொதுவெழுத்தாதல் தோற்றற்குச் சூத்திரத்தாற் பிரித்தோதினாரென்க.
(பி - ம்.) 1இய்புமாம் 2அயன், பங்கயம் 3சாட்டுவலம், விடம் | (20) | | (147) | ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே. | இதுவுமது.
(இ - ள்.) ரகார லகார யகாரங்களை முதலாகவுடைய மொழிகளின் மேல் இம்மூன்றுகுற்றுயிரும் சொன்னவாறுவரும் எ - று.
வ - று. 1அரங்கம், இராமன், இராவணன், உரோமம் எனவும்; இலங்கை, இலாபம், உலோபம் எனவும்; இயக்கன், இயாத்திரை எனவும் முறையே காண்க.
(பி - ம்.) 1அரங்கன் | | (148) | இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமு நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி யவ்வு மாம்பிற. | இதுவுமது.
(இ - ள்.) இஃது இரண்டெழுத்து ஒன்றாய் வருமிடத்து யரலக்களின் மீதே இகரமும், மகரவகரங்கண்மீதே உகரமும், நகரமீதே அகரமும், ரகரத்தின்பின்னே உகரமும் வரும் எ - று.
வ - று. வாக்கியம், வாச்சியம், நாட்டியம் எனவும்; வக்கிரம், வச்சிரம், சத்திரம், அப்பிரம் எனவும்; சுக்கிலம், ஆமிலம் எனவும்; பதுமமெனவும்; பக்குவம், தத்துவமெனவும்; அரதநமெனவும்;
அருக்கன், அருத்தம், தருப்பணம், 1சருப்பம், சருக்கம், தருமமெனவும் முறையே காண்க. பிறவென்றமிகையானே சத்தி, கட்சி, காப்பியம், பருப்பத மென்றற்றொடத்துத் திரிபும், தூலம், அத்தம், ஆதித்தன், அநத்தம் என்றற்றொடக்கத்துக் கேடும், 2மற்றும் விகாரத்தால் வருவனவும் கொள்க.
(பி - ம்.) 1கருப்பம், கருத்தன் 2மற்று | (22) | | (149) | றனழஎ ஒவ்வு முயிர்மெய்யு முயிரள பல்லாச் சார்புந் தமிழ்பிற பொதுவே. | எ - ன், தமிழிற் சிறப்பெழுத்தும் பொதுவெழுத்துமுணர்த்துதல் நுதலிற்று. | |
|
|