68

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     ஈண்டு இயற்பெயர்மாத்திரையே தொகுத்துணர்த்தியது; இவற்றின்
வினாவிளியுருபுமுதலாயினவெல்லாம் மேல் ஏற்றவிடங்களிற் காண்க.

     (பி - ம்.) 1உயிரும் யகரமும் ரகரமும் 2 (1) தண்ணளியன், (2) திண்ணியன் 3 (1)
வண்ணாரப்பண்டி, (2) வண்ணாரப்பட்டி, (3) வண் ணாப்பட்டி

(9)

 

(159)

ஈற்றியா வினாவிளிப் பெயர்முன்வலி யியல்பே.

     எ - ன், வினா விளிப்பெயர்கள் வல்லினத்தொடு புணருமாறு
உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) ஈற்றுவினாமுன்னும் யாவினாமுன்னும் விளிப்பெயர்கள் முன்னும்
வரும்வல்லினம் இயல்பாய்ப்புணரும் எ - று.

     வ - று. (*உண்கா, உண்கே, உண்கோ) + (கொற்றா, சாத்தா, தேவா, பூதா)
எ -ம்; யாகுறிய, யாசிறிய, யாதீய, யாபெரிய எ - ம் வினா முன் வல்லினம்
இயல்பாயின.
((கொற்றா, சாத்தா, கொற்றீ, சாத்தீ; நாகா, நம்பீ, தோழீ, செவிலீ; நாயே, நரியே, நீரே,
நிலனே) + (கொள், செல், 1தா, போ) என முப்பெயர்விளிகள்முன்னும் வல்லினம்
இயல்பாயின.

     பொதுப்பெயருயர்திணைப்பெயர்களை முன்னே முடித்துவைத்தும்
வினாவிளியுறுபேற்றுநிற்றலின், ஈண்டும் விதந்தோதினா ரென்க.

     (பி - ம்.) 1து

(10)

 

(160)

ஆவி யரழ விறுதிமுன் னிலைவினை
ஏவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே.
 
     எ - ன், முன்னிலைவினையும் முன்னிலையேவலும் வல்லினத்தொடு புணருமாறு
உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) உயிரும் யரழவென்னும் மூன்றுமெய்யும் ஈறாகவரும்
முன்னிலைவினையே முன்னிலையேவலேயென்றிவற்றின்முன் வல்லினம் இயல்பாயும்
விகற்பாயும் புணரும் எ - று.

     வ - று. (உண்டி, தின்றி, உண்டனை, தின்றனை, உண்டாய், தின்றாய்) + (கொற்றா,
சாத்தா, தேவா, பூதா) எ - ம்; (1உண்டனிர், தின்றனிர்) + (கொற்றரே, சாத்தரே,
தேவரே, பூதரே) எ - ம் முன்னிலைவினை முன் வல்லினம் இயல்பாயின. விகற்பம்
வந்தவழிக் கண்டுகொள்க. (கொணா, எறி, விடு, ஆய், சேர், தாழ்) + (கொற்றா, சாத்தா,
தேவா, பூதா) என ஏவல்முன் வல்லினம் இயல்பாயின. நடகொற்றா, நடக்கொற்றா,
கிடகொற்றா, கிடக்கொற்றா, 2பெய்கொற்றா பெய்க்கொற்றா. எய்கொற்றா எய்க்கொற்றா,
ஈர்கொற்றா ஈர்க்கொற்றா, தாழ்கொற்றா, தாழ்க்கொற்றா, (நட, கிட, பெய், எய், ஈர், தாழ்)
+ (சாத்தா, தேவா, பூதா) என ஏவல்முன் வல்லினம் விகற்பமாயின. பிறவும் வந்தவழிக்
கண்டுகொள்க.
     * உண்காகொற்றா, உண்காசாத்தா............எனக் கூட்டுக. (கொற்றாகொள்...............என
இயைக்க.