| 2.- உயிரீற்றுப்புணரியல் | 69 | | | | ழகாரவீறு முன்னிலைவினை ஏலாமையிற் காட்டிற்றிலம். ஏவல் பிரித்தோதியது. விளங்குதற்கெனக்கொள்க.
(பி - ம்.) 1உண்டீர், தின்றீர் 2போகொற்றா, போக்கொற்றா | (11) | | | (161) | இஈ ஐவழி யவ்வு மேனை உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும். | எ - ன், உயிரீற்றுமொழிமுன் உயிர்முதன்மொழிவந்து புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இகர ஈகார ஐகாரங்களின்வழியே யகரமும், அ ஆ உ ஊ ஒ ஓ ஒள என்னும் இவ்வேழுயிர்களின்வழியே வகரமும், ஏகாரத்தின் வழியே யகரமும் வகரமும் உயிர்முதலாகிய சொற்கள்வந்தால் உடம்படு மெய்யென்னும் பெயரவாய் வரும் எ - று.
வ - று. மணியழகிது, தீயழகிது, மலையழகிது எ - ம்; (*விள, பலா, கடு, பூ, நொ, சோ, வௌ) + (அடைந்தது, 1ஆறிற்று, 2இடைந்தது, ஈறிற்று, உடைந்தது, 3ஊறிற்று, எழுந்தது, 4ஏறிற்று, ஐது, ஒழிந்தது, ஓங்கிற்று) எ - ம்; “ஏயே யிவளொருத்தி பேடியோ வென்றார்” (சீவக. 652), சேவழகிது எ - ம் வந்தவாறு காண்க. மணியழகு, விளவழகு என வேற்றுமைப்பொருட்குமொக்கும்.
ஒளகாரம் தானே மொழிக்குமுதலாதல் வழக்குப்பயிற்சியின்மையின், இன்னோரன்ன இடங்களில் வாராது. எகரமும் அளபெடையினல்லது தானாகநின்றும் மெய்யோடுகூடிநின்றும் ஈறாகாமையால், ஈற்றுக்குவரும் விதிகளைப் பெரும்பாலும் ஏலாதென்க.
இதனை, இயல்பு புணர்ச்சியென்பாருமுளர்.
(பி - ம்.) 1ஆடிற்று 2இழைந்தது 3ஊற்றிற்று 4ஏற்றிற்று | (12) | | | (162) | எகர வினாமுச் சுட்டின் முன்னர் உயிரும் யகரமு மெய்தின் வவ்வும் பிறவரி னவையுந் தூக்கிற் சுட்டு நீளின் யகரமுந் தோன்றுத னெறியே. | எ - ன், வினாவும் சுட்டும் நாற்கணத்தோடு புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) எகரவினாமுன்னும் சுட்டுக்கண்முன்னும் உயிரும் யகரமும் வந்தால் வகரமும், ஏனை ஒன்பதுமெய்யும்வந்தால் வந்தவையும், செய்யுட்கட் சுட்டுநீண்டிசைத்தவழி யகரமும் மிகுதல் முறைமை எ - று.
வ -று. எவ்வணி, 1எவ்யானை; அவ்வணி, 2அவ்யானை; இவ்வணி, 3இவ்யானை; உவ்வணி, 4உவ்யானை எ - ம்; எக்குதிரை, எச்சேனை, எத்தண்டு, எந்நாடு, எப்படை, எம்மனை, எவ்வளை, எஞ்ஞாலம், எங்ஙனம் | * விளவடைந்தது .............. என இயைக்க. | | | | | |
|
|