(இ - ள்.) பாடம்சொல்லலும், கருத்துரைத்தலும், 1சொல்வகுத்தலும் 2சொற்பொருள் உரைத்தலும், பொழிப்புரைத்தலும், உதாரணங்காட்டலும், வினாத்தோற்றலும், விடைகொடுத்தலும், விசேடங்காட்டலும், விரிவு காட்டலும், அதிகாரவரவுகாட்டலும், துணிவுகூறலும், பயனொடுபடுத்தலும், ஆசிரியவசனங்காட்டலுமென்னும் இப்பதினான்குபகுதியானும் உரைக்கப்படும், சூத்திரப்பொருள் எ - று. ( தொகுத்துக் கண்ணழித்தல் 3விரித்துக் கொணர்ந்துரைத்தலென்னும் இருகூறும், பொழிப்பு, அகலம், நுட்பமென்னு மூவகையும், எடுத்துக் கோடல், பதங்காட்டல், பதம்விரித்தல், பதப்பொருளுரைத்தல், வினாதல், விடுத்தலென்னும் அறுகூறும், பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம், * ‘ஆற்றொழுக்கு’ என்பது முதலாக, ‘முடித்துப்போமியைபினது’ என்பது இறுதியாகவுள்ள பகுதிகள் சிலபிரதிகளில் இல்லை. ( பொதுச்சூத்திரமுதலியவேறுபாடுகள். ( இங்கேகாட்டிய உரைவிகற்பங்களாறும் யாப்பருங்கலம், முதற்சூத்திரவுரையிலும் காணப்படுகின்றன. |