| 2.- உயிரீற்றுப்புணரியல் | 77 | | | | (இ - ள்.) மரமல்லாத சுவைப்புளிமுன் வல்லெழுத்துக்கள் வந்தால் அவற்றிற்கு இனமான மெல்லெழுத்துக்களும் மிகப்பெறும்எ - று.
வ - று. புளிங்கறி (சீவக. 928, உரை), புளிஞ்சோறு, புளிந்தயிர், புளிம்பாளிதம் எனவரும்.
உம்மையாற் பொதுவான வல்லெழுத்துப் பேறுங்கொள்க. | (25) | | | (175) | அல்வழி இஐ முன்ன ராயின் இயல்பு மிகலும் விகற்பமு மாகும். | எ - ன், எய்தாதது எய்துவித்தலும் எய்தியது இகந்துபடாமைக்காத்தலும் நுதலிற்று.
(இ - ள்.) அல்வழிக்கண் இகரமே ஐகாரமேயென்றிவற்றின் முன் வல்லினம் வருமாயின் இயல்பாயும் மிக்கும் ஒன்றற்கே ஒருகால் மிகாதும் ஒருகால்மிக்கும் வரும் எ - று.
வ -று. பருத்திகுறிது, ஒதிகுறிது; சிறிது, தீது, பெரிது எ - ம்; யானைகுறிது, குதிரைகுறிது; சிறிது, தீது, பெரிது எ - ம் இயல்பாயின. “ஆடித்திங்கள்” (சிலப். கட்டுரை. 133), அலிக்கொற்றன் எ - ம்; “சித் திரைத்திங்கள்” (சிலப். 5: 64), புலைக்கொற்றன் எ - ம் மிக்கன. கிளிகுறிது கிளிக்குறிது எ - ம், தினைகுறிது தினைக்குறிது எ - ம் விகற்பித்தன. பிறவுமன்ன.
1மிகுதி இறந்துபடாமற்கு 2ஈண்டுங்கூறினாரென்க.
(பி - ம்.) 1 மிகுதியும்விகற்பமும் 2 ஈண்டுக் | (26) | | | (176) | ஆமுன் பகரவீ யனைத்தும்வரக் குறுகும் மேலன வல்வழி யியல்பா கும்மே. | எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல்நுதலிற்று.
(இ - ள்.) ஆவென்னும் பெயரீற்றினின்ற பகரவீகாரம் நாற்கணத்தோடும் புணருமிடத்து இருவழியும் குறுகும்; குறுகிநின்ற அதன்மீதேவரும் வல்லினம் அல்வழிக்கண் இயல்பாம் எ - று.
வ - று. ஆப்பி(கோமயம்; புறநா. 249)யரிது; குளிரும், நன்று, வலிது எ - ம், ஆப்பியருமை; குளிர்ச்சி, நன்மை, வன்மை எ - ம் இரு வழியும் குறுகிற்று. ஆப்பிகுறிது; சிறிது, தீது, பெரிது என அல்வழிக்கண் வல்லெழுத்துக்கள் இயல்பாயின. ஆப்பிப்புழு என வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிக்கதெனக்கொள்க. | (27) | | | (177) | பவ்வீ நீமீ முன்ன ரல்வழி இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே. | எ - ன், எய்தியது விலக்கலும் பிறிதுவிதிவகுத்தலும் நுதலிற்று.
(இ - ள்.) பகரத்தோடுகூடிநின்ற ஈகாரவீற்றுப்பெயரே நீயென்னு முன்னிலைப்பெயரே மீயென்னும் இடப்பெயரே என்றிவற்றின்முன் வல்லினம் அல்வழிக்கண் இயல்பாம்; மீயென்பதன்முன் ஒரோவழி வல்லெழுத்து மெல்லெழுத்து மிகவும்பெறும் எ - று. | |
|
|