78

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     வ - று. பீகுறிது; சிறிது, தீது, பெரிய எ - ம், நீகுறியை; சிறியை, தீயை, பெரியை
எ - ம், மீகண் எ - ம் இயல்பாயின. மீக்கோள் (மேற் போர்வை. ஆசார. 31), மீப்பாய்
(கப்பலின் மேற்பாய். புறநா. 30,
     பி -ம்) எ - ம், மீங்குழி, மீந்தோல் (மேலுள்ள தோல்; அகநா. 3,
பி - ம்) எ - ம் வலிமெலி மிக்கன.

(28)

 

(178)

மூன்றா றுருபெண் வினைத்தொகை சுட்டீ
றாகு முகர முன்ன ரியல்பாம்.
 

(179)

அதுமுன் வருமன் றான்றாந் தூக்கின்.

     எ - ன், முற்றுகரத்துக்கு எய்தியதுவிலக்கலும் பிறிதுவிதி வகுத்தலும் நுதலிற்று.

     (இ - ள்.) மூன்றும்ஆறுமான உருபே எண்ணே வினைத்தொகையே
சுட்டேயென்றிவற்றின் ஈற்றுகரமுன் வல்லினம் இயல்பாம்;
அதுவென்னுஞ்சுட்டின்முன்வந்த அன்றென்னும் மறைமொழி செய்யுளுள்வந்தால்
முதல்நீளும் எ - று.

     வ - று. சாத்தனொடுகொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எ - ம்;
சாத்தனதுகை; செவி, தலை, புறம் எ - ம்; ஒருகாசு; சின்னம், தலை, பகல்; இருகண்,
அறுசுவை, எழுகண், எழுகடல், எ - ம்; அடுகளிறு; சேனை, தானை, படை எ - ம்;
(அது, இது, உது) + (குறிது, சிறிது, தீது, பெரிது) எ - ம் முறையே இயல்பாயின.
“அதான்று” (முருகு. 77; அகநா. 98) என வருமொழிமுதல் நீண்டது.

     மூன்றும் ஆறுமான உருபென விரித்துரைக்க.

(29-30)

 

(180)

வன்றொட ரல்லன முன்மிகா வல்வழி.

     எ - ன், குற்றுகரவீற்றுள், வன்றொடரல்லாத ஐந்தற்கும் எய்தியது ஒருவழி
விலக்குதல்நுதலிற்று.

     (இ - ள்.) வன்றொடரொழிந்த ஐந்து குற்றுகரவீற்றுமுன்னும் வல்லினம் மிகா,
வேற்றுமையல்லாவழி எ - று.

     வ - று. (நாகு, எஃகு, வரகு, கோங்கு, 1தெள்கு) + (கடிது, சிறிது, தீது, பெரிது)
என இயல்பாயின. உறங்குகின்றான், அஞ்சுகின்றான், உண்டு போயினான்,
2எறிந்துபோயினான் என்பனமுதலாயினவும் கொள்க. சுக்குக் கடிது, பதக்குப்பெரிது என
3வன்றொடர்முன் மிக்கவாறு காண்க.

     (பி - ம்.) 1 தொள்கு 2 இறந்து 3 வன்றொடரின் மிக்கனவுங்கொள்க.

(31)

 

(181)

இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின்
மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை.

     எ - ன், எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று.