8

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
பதப்பொருளுரைத்தல், ஏற்புழிக்காட்டல், எண்ணலென்னு மேழும். “சொல்லே சொல்வகை சொற்பொருள்சோதனை, 4மறைநிலையிலேசெச்ச நோக்கே துணிவே,
கருத்தே செலுத்தலென் றீரைந்து கிளவியு, நெறிப்படவருவது பனுவலுரையே” என்னும்
இப்பத்தும், 5சூத்திரந்தோற்றல், சொல்வகுத்தல்,சொற்பொருளுரைத்தல், வினாதல்,
விடுத்தல், விசேடங்காட்டல், உதாரணங்காட்டல்,ஆசிரியவசனங்காட்டல், 6அதிகாரவரவு
காட்டல், தொகுத்துமுடித்தல்,விரித்துக்காட்டல், துணிவுகூறல், பயனொடு
புணர்த்தலென்னும் *இப்பதின்முப்பகுதியுமான இம்மத விகற்பமெல்லாம்
இப்பதினான்கினுள்ளேஅடங்குமெனக்கொள்க.     
     (பி - ம்.) 1சொல்வகுத்துரைத்தலும் 2சொற்பொருளுணர்த்தலும்;
சொற்பொருள்விரித்தலும். 3விரித்துத்தேர்ந்துரைத்தல் 4மறைநிலையெச்ச நோக்கே
5சூத்திரம்வகுத்தல் ஐயந்தோற்றல் 6அதிகாரவடைவு

(20)

காண்டிகையுரை

 

(21)

கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை யாக்க லானும்
சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை.
     (இ - ள்.) 1இவ்விருவகையானும் வருவன காண்டிகைகள்
     எ - று. காட்டாவது உதாரணம்.
     (பி - ம்.) 1இவ்வகையான்வருவன

(21)

விருத்தியுரை

 

(22)

சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக்
கின்றி 1யமையா யாவையும் விளங்கத்
தன்னுரை யானும் பிறநூ லானும்
ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு

5

மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி.
     (இ - ள்.) இவ்விதி 2யனைத்துமுள்ளது விருத்தியாவது எ - று.
     (பி - ம்.) 1யமையாதியாவையும் 2யனைத்தும்விருத்தி

(22)

நூலென்னும்பெயர்க்காரணம்

 

(23)

(பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூன்முடியு மாறு.

     * இவற்றோடு கருத்துரைத்தலென்பதொன்றைக்கூட்டி, உரை, 14 - என்பர்
     (வீர. அலங். 38, உரை.)
     ( நூலென்றசொல்லுக்கு இவ்வெண்பாக்களிற் கூறப்பெற்றபொருள்கள்
     இறையனாரகப்பொருளுரையிலுமுள்ளன;