| 2.- உயிரீற்றுப்புணரியல் | 81 | | | | பிறவென்ற 4விதப்பினானே கிழவென்பதனைக் 6கீழெனநிறுவி, கீழ்பால், கீழ்சார், கீழ்கரை என வருவனவும், மேற்றிசையென்றற் 7றொடக்கங்களுள் திரியாமையும் வருமொழித் 8திரிபுகளும் கொள்க.
(பி - ம்.) 1நிலைமொழியீற்றினின்ற 2லகாரமாய் 3தென்றலை4மேற்றலை 5மிகையானே 6கீழென்றாக்கி 7தொடக்கத்தனவுட்டிரியாமல் 8திரிபும் | (36) | | | (186) | தெங்குநீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின். | இதுவுமது.
(இ - ள்.) காயென்னுமொழிவரின், தெங்கென்னும் 1மொழிமுதல் நீண்டு ஈற்றுயிர்மெய்கெடும் எ - று.
வ - று. தேங்காய் எனவரும்.
இவ்வாறு வழக்குண்மையின் இதுவும் எடுத்தோதினாரென்க.
(பி - ம்.) 1 மொழியின் | (37) | | | (187) | எண்ணிறை யளவும் பிறவு மெய்தின் ஒன்று முதலெட் டீறா மெண்ணுள் முதலீ ரெண்முத னீளு மூன்றா றேழ்குறு கும்மா றேழல் லவற்றின் | | | 5 | ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும் ஏகு மேற்புழி யென்மனார் புலவர். | எ - ன், எண்பெயருடனேஎண்ணாதிப்பெயர் புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) எண் நிறை அளவும் பிறவும் எய்தின் - இந்நால்வகைப் பெயரும் வருமொழியாய்வரின், ஒன்றுமுதல் எட்டீறாமெண்ணுள் - ஒன்று முதலாகநின்ற எண்வகையெண்களுள் வைத்துக்கொண்டு, முதலீரெண் முதனீளும் - முதற்கணின்ற 1ஒன்றிரண்டென்னும் இவ்விரண்டின் முதலுயிரும் நீளும் எ - று.
வ - று. ஓரொன்று, 2ஓரெடை, ஓருழக்கு, 3ஓராண்டு; ஈரொன்று, 4ஈரெடை, ஈருழக்கு, 5ஈரிலைப்போந்து என வரும்.
மூன்று ஆறு ஏழ்குறுகும் எ - து இம்மூன்றெண்ணும் முதலுயிர் குறுகும் எ - று.
வ - று. முப்பது, முக்கழஞ்சு, 6முக்கலம், முப்பழம்; அறுபது, அறுகழஞ்சு, அறுகலம், அறுமீன்; எழுபது, எழுகழஞ்சு, எழுகலம், எழுபிறப்பு எனவரும்.
ஆறேழல்லவற்றின் ஈற்றுயிர்மெய்யும் ஏழனுயிரும் ஏகும் எ - து ஆறும்ஏழும் ஒழிந்த எண்களின் ஈற்றில் நின்ற உயிர்மெய்யும் ஏழன் ஈற்று உயிரும் கெடும் எ - று. | |
|
|