| 82 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | வ - று. ஒன், இரண், மூன், நான், ஐந், ஏழ், எட் என வரும்.
ஏற்புழி எ - து இவ்விதிகள் யாண்டும் ஆகா; தமக்குப் பொருந்திய வழியே வருவனவாம் எ - று.
என்மனார்புலவர் எ - து என்றுசொல்லுவர் அறிவுடையோர்எ - று.
இதனுள் ‘எண்ணிறையளவும் பிறவுமெய்தின்’ என்பதனை மேல் வரும் ஐந்துசூத்திரத்தோடு கூட்டியும், ‘ஏற்புழி’ என்பதனை இப்பொருண்மை அதிகாரம் முற்றுமளவு உய்த்தும் உரைக்க.
(பி - ம்.) 1ஒன்றும் இரண்டும் முதனீளும் 2ஓரடை 3ஓரியாண்டு 4ஈரடை 5ஈரிலைபோந்தன 6முக்காலி | (38) | | | (188) | ஒன்றன் புள்ளி ரகர மாக இரண்ட னொற்றுயி ரேகவுவ் வருமே. | இதுவுமது.
(இ - ள்.) எண்முதல் நாற்பெயரும்வருமிடத்து ஒன்றென்னும் எண்ணிடைநின்ற 1னகரம் ரகரமாக இரண்டென்னும் எண்ணிடைநின்ற ணகர வொற்றும் 2ரகரமிசைநின்ற அகரமும்போக அவ்விரண்டெண்ணின் ரகரத்தின்மேலும் உகரம்வரும் எ - று.
வ - று. 3ஒருபது, இருபது; கழஞ்சு, கலம், கல் எனவரும்
(பி - ம்.) 1னகரவொற்று 2அதனயல் ரகாரமிசை 3ஒருபணம், இருபணம்; ஒரு, இரு எனவரும். | (39) | | | (189) | மூன்றனுறுப் பழிவும் வந்தது மாகும். | இதுவுமது.
(இ - ள்.) எண்ணாதிப்பெயர்வருமிடத்து மூன்றென்னும் எண்ணிடை நின்றஒற்று, கெடுதலும் வந்தஒற்றாகத் திரிதலுமாம்எ - று.
வ - று. மூவொன்று, மூவெடை, மூவுழக்கு, மூவுலகு எனவும்; முப்பது, முக்கழஞ்சு, முந்நாழி, மும்மொழி எனவும் வரும். | (40) | | | (190) | நான்கன் மெய்யே லறவா கும்மே. | இதுவுமது.
(இ - ள்.) எண்ணாதிப்பெயர் வருமிடத்து நான்கென்னும் எண்ணிடை நின்ற னகரம் லகரமும் றகரமுமாகத்திரியும் எ - று.
வ - று. நாலொன்று, நாலெடை, நாலுழக்கு, 1நால்யானை எனவும்; நாற்பது, நாற்கழஞ்சு, நாற்கலம், நாற்கவி எனவும் வரும்.
(பி - ம்.) 1நாலியானை | (41) | | | (191) | ஐந்தனொற் றடைவது மினமுங் கேடும். | இதுவுமது.
(இ - ள்.) எண்ணாதிப்பெயர் வருமிடத்து ஐந்தென்னுமெண்ணிடை நின்ற ஒற்று வருமொற்றாகியும் அதற்கினமாகியும் 1 கெட்டும் முடியும் எ - று. | |
|
|