2.- உயிரீற்றுப்புணரியல்

83

   
     வ - று. ஐம்மூன்று, ஐம்மஞ்சாடி, 2ஐவ்வட்டி, ஐவ்வண்ணம்,எ - ம், ஐம்பது,
ஐங்கழஞ்சு, ஐங்கலம், ஐஞ்சந்தி எனவும், ஐயொன்று, ஐயெடை, ஐயாழாக்கு, 3ஐயோடை
எனவும் வரும்.

     (பி - ம்.) 1 கெட்டும் இம்மூன்றினாலு முடியும் 2ஐவ்வட்டம் 3ஐவிரல் எ - ம்
அடைவதும் இனமும் கேடடைவதும் அடைவேகாண்க.

(42)

 

(192)

எட்ட னுடம்பு ணவ்வாகு மென்ப.

     இதுவுமது.

     (இ - ள்.) எண்ணாதிநாற்பெயரும் வருமிடத்து எட்டென்னும் எண்ணிடைநின்ற
ஒற்று ணகாரமாகத்திரியுமென்று சொல்லுவர், புலவர் எ - று.

     வ - று. எண்பது, எண்கழஞ்சு, எண்கலம், எண்குணம் எனவரும்.

     இவற்றுட் சில குற்றுகரங்கள் முற்றுகரமாகத்திரிந்து புணர்ச்சிக்கண்
இயல்புச்சந்தியாக முடிவனவெல்லாம், “மூன்றாறுருபு” என்னும் சூத்திர விதியுட்
கண்டுகொள்க

(43)

 

(193)

ஒன்பானொடு பத்து நூறு மொன்றின்
முன்னதி னேனைய முரணி யொவ்வொடு
தகர நிறீஇப் பஃதகற்றி னவ்வை
நிரலே ணளவாத் திரிப்பது நெறியே.

     எ - ன், தொண்ணூறும் தொள்ளாயிரமும் முடிக்குமாறுஉணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஒன்பதென்னும் 1எண்முன்னர்ப் பத்தும் நூறுமான எண்கள்வரின்,
நிலைமொழியான 2ஒன்றூனப்பத்தானே வருமொழிகளிரண்டையுமாறி அதன்பின் அதன்
ஒகாரத்துடனே ஒரு தகரவொற்றைச் சேர்த்துப் பஃதென்பதனை யொழித்து முறையே
3ணகரமும் ளகரமுமாக னகர வொற்றைத்திரிப்பது முறைமை எ - று.

     ஒன்றூனமானபத்து - ஒன்பது; அஃது அக்காலச்சொல்.

     வ - று. தொண்ணூறு, தொள்ளாயிரம் எனவரும்.

     எட்டாற்பெருக்கினபத்து எண்பதானாற்போலவே ஒன்றூனப் பத்தாற் பெருக்கின
பத்தும் நூறும் தொண்ணூறும் தொள்ளாயிரமுமாமென்க. ‘நெறி’ என்றதனான் ஒற்று
4இரட்டாது தொளாயிரமென்பதும் கொள்க.

     (பி - ம்.) 1எண்ணின் 2ஒன்றூனமான பத்தானே பத்தும் நூறுமான மொழிகள்
3ணகாரளகாரமாக 4இரட்டியாது

(44)

 

(194)

முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின்
இடையொற் றேக லாய்த மாகல்
எனவிரு விதியு மேற்கு மென்ப.

     எ - ன், எண்ணோடு எண் புணருமாறுஉணர்த்துதல்நுதலிற்று.