86 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (199) | பூப்பெயர் முன்னின 1மென்மையுந் தோன்றும். | எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதனுதலிற்று.
(இ - ள்.) பூவென்பதன்முன் வல்லெழுத்துமிகலேயன்றி வருவதன் இனமான மெல்லெழுத்துவரவும்பெறும் எ - று.
வ - று. பூங்கொடி; 2சோலை, தாமம், பந்து என வரும்.
உம்மையாற் பூக்கொடிமுதலானவும் கொள்க.
(பி - ம்.) 1மென்மையும்புணரும். 2சாலை | (50) | | (200) | இடைச்சொ லேயோ முன்வரி னியல்பே. | எ - ன், எய்தியதுவிலக்குதல் நுதலிற்று.
(இ - ள்.) இடைச் 1சொல்லாய்வரும் ஆறு ஏகாரமும் எட்டு ஓகாரமுமான இவற்றின்முன்வரும் வல்லினம் இயல்பாம் எ - று.
வ - று. அவனேகொண்டானென்பது பிரிநிலை; நீயேகொண்டா யென்பது வினா; காலே கையே செவியே தலையே என்பது எண்; “கழியே, 2சிறுகருநெய்தல்...........3பாடோவாதே’ (அகநா. 350) என்பது ஈற்றசை; அவனேகொண்டானென்பது தேற்றம்; “ஏஎதனையென்றோரிருடிவினவ” என்பது இசைநிறை. கொளலோகொண்டானென்பது ஒழியிசை; அவனோ அல்லனோ சொன்னானென்பது வினா; ஓஒ பெரியனென்பது சிறப்பு; யானோ கொண்டேனென்பது எதிர்மறை; நன்றோ தீதோவன்றென்பது தெரிநிலை; அவனோபோனானென்பது கழிவு; “காணிய வம்மினோ கங்குலது நிலையே” என்பது அசைநிலை; அவனோகொண்டானென்பது பிரிநிலை; இயல்பாயினவாறு காண்க.
(பி - ம்.) 1 சொல்லென 2 (1) சிறுநெய்தல் (2) கருநெய்தல் 3பாடொவ்வாதே | (51) | | (201) | வேற்றுமை யாயி னைகா னிறுமொழி ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே. | எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) வேற்றுமையிடத்து ஐகாரவீற்றுச்சொற்களுள், பொது விதியான்வரும் வல்லெழுத்துப்பேறேயன்றி ஐகாரங்கெட்டு அம்முப்பெற்று முடிவனவும் சிலஉளவாம் எ-று.
வ - று. ஆவிரங்கோடு, வழுதுணங்காய், 1தூதுளங்காய், தில்லங்காய், பாவட்டங்காய், (ஆவிரை, வழுதுணை, தூதுளை, தில்லை, பாவட்டை) + (2செதிள், தோல், பூ) எ - ம், ஓலம்போழ் எ - ம் வரும்.
‘ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே’ 3என்றதனான் ஈற்றழிவின்றியே அம்மேற்பவும் உளவெனக்கொள்க: அவை, அரையங்காய், 4பனையங்கோல் எனவரும். ‘ஏற்பவும்’ என்றது, பொதுவிதி வல்லெழுத்துவிலக்காமற் கோடற்கெனக்கொள்க.
(பி - ம்.) 1தூதுணங்காய் 2செதுள் 3என்பதனால் 4மனையங்கோல் | (52) | |
|
|