4. - மெய்யீற்றுப்புணரியல்

87

   
 

(202)

பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின்
ஐபோ யம்முந் திரள்வரி னுறழ்வும்
அட்டுறி னைகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை.
     எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல்நுதலிற்று.

     (இ - ள்.) பனையென்னும்பெயர்முன் கொடியென்பதுவரின் வந்தது மிகலும்,
வல்லெழுத்துவரின் ஐகாரங்கெட்டு 1அம்முப் பெறுதலும், திரளென்னுமொழிவரின்
அம்முடன் உறழ்தலும், அட்டென்பதுவரின் ஐகாரங்கெட்டு
2வருமொழிமுதல்நீளுதலுமாம், வேற்றுமைக்கண் எ - று.

     வ -று. பனைக்கொடி எனவும், பனங்காய், 3பனஞ்செறும்பு, பனந்தூண், பனம்பழம்
எனவும், பனைத்திரள் பனந்திரளெனவும், பனாட்டு எனவும் முறையே காண்க.

     இதற்குவரும் அகலம் உரைத்துக்கொள்க; “அகல மென்பதாசறக் கிளப்பின், விகல
மின்றி விரித்துரைப் பதுவே” (காரி - உரை.)

     (பி - ம்.) 1அம்முறுதலும் 2வருமொழிக்கு 3பனஞ்சோறு, பனந்துண்டம்

(53)

மூன்றாவது உயிரீற்றுப்புணரியல் முற்றிற்று.

நான்காவது

மெய்யீற்றுப்புணரியல்

 

(203)

உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே.

     இவ்வோத்து என்னுதலியதோவெனின், ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது
பெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வோத்து என்னபெயர்த்தோ வெனின்,
மெய்யீற்றுப்பதம் புணருமாறு உணர்த்திற்றாகலான், மெய்யீற்றுப்புணரியலென்னும்
பெயர்த்து. மேலோத்தினோடு இதற்கு இயைபு என்னையோவெனின், மேல்
உயிரீற்றுப்பதம் புணருமாறு உணர்த்தினார்; இதனுள், மெய்யீற்றுப்பதம் புணருமாறு
உணர்த்தினமையின், இயைபுடைத்தென்க.

     இவ்வோத்தினுள் இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், ஒற்றின்முன்
உயிர்வந்துபுணருமாறு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்) நிலைமொழியீற்றினின்ற ஒற்றின்மேலே வருமொழி முதல் நின்ற
உயிர்வந்து ஒன்றுவது இயல்பு புணர்ச்சியாம் எ - று.

     உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் உலகத்துமுறைமை என்றுமாம்.