88

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     வ - று. (*உரிஞ், நாண், வெரிந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், புகழ்,
நாள்) + (அழகிது, ஆன்றது, இயன்றது, ஈண்டிற்று, உயர்ந்தது, ஊன்றிற்று, எழுந்தது,
ஏறிற்று, ஐது, ஒழிந்தது, ஓங்கிற்று) என முறையே ஒட்டிக்கொள்க. ஒளவொடுவரும்
வழியும் ஆராய்ந்துகொள்க. (உரிஞ்..........நாள்) + (அழகு, ஆட்டம், இயைபு) என
வேற்றுமைக்கண்ணும் கொள்க.

 (1)

(204)

தனிக்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும்.

     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) ஒருகுற்றெழுத்தின் முன்னே நின்ற ஒற்று உயிர்வரின் இரட்டித்துநிற்கும்
எ - று.

     வ - று. மண்ணழகிது, கம்மழகிது, பொன்னழகிது, நெய்யழகிது, கல்லழகிது,
தெவ்வழகிது, புள்ளழகிது எனவரும்; ஆன்றது, இயைந்த தென ஏனை உயிர்களோடும்
ஒட்டிக்கொள்க. அமைவு, ஆக்கம், இன்மை, ஈகையென வேற்றுமைக்கண்ணும் ஒட்டுக.

(2)

 

(205)

தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரம்
துன்னு மென்று துணிநரு முளரே.

     எ - ன், யகரமொழிந்த பத்துமெய்கள்முன்னும் யகரம்வந்து புணருமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) தன்னையொழிந்த பத்து ஒற்றின்முன்னும் யகரம்வரின் இடையே
இகரம்வந்து பொருந்துமென்று தெளிந்துசொல்லுவாரும் சிலருளர் எ - று.

     வ - று. உரிஞியானை, மண்ணியானை, வெரிநியானை, நம்மியானை,
பொன்னியானை, காரியானை, கல்லியானை, தெவ்வியானை, தாழியானை, வெள்ளியானை
எனவரும்.

     உம்மையால் துணியாதார் பெரும்பாலரெனக்கொள்க; உரிஞ்யாது, மண்யாது
எனவரும்.

(3)

 

(206)

ஞணநம லவளன வொற்றிறு தொழிற்பெயர்
ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின்
உவ்வுறு 1மேவற் குறாசில சில்வழி.

     எ - ன், தொழிற்பெயர்க்கும் ஏவல்வினைக்கும் ஆவதோர்விதி
உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இவ்வெட்டொற்றும் ஈறாகவரும் தொழிற்பெயரும் ஏவல்
வினைச்சொல்லும் யகரமொழிந்த மெய்கள்வரின் இடையே உகரம்பெறும்; ஏவலிடத்துச்
சில சிலவிடங்களிற் பெறாதனவுமாம்எ - று.

     பொதுப்பட வைத்தமையால், தொழிற்பெயர்க்கண் இருவழியும் கொள்க.

     * உரிஞழகிது,.....................நாளோங்கிற்று என ஒட்டிக்கொள்க.