4. - மெய்யீற்றுப்புணரியல்

89

   
     வ - று. (*உரிஞ், மண், பொருந், செம், புல், தெவ், துள், துன்) + (கடிது, சிறிது,
தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது) எ - ம், (கடுமை, சிறுமை, தீமை,
பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை) எ - ம் இருவழியும் தொழிற்பெயர்க்கண்
உகரம் வந்தது.

     இவற்றை எடுத்து உச்சரித்துப் பெயரைவருவித்து ஏவல்வினையாக்கி
உகரம்பெறுமாறு காண்க.

     அவை: உரிஞுகொற்றா; சாத்தா, தேவா, பூதா, ஞெள்ளா, நாகா, மாடா, வளவா
எனவரும். பிறவுமன்ன.

     (*உண், தின், கொள்) + (கொற்றா, சாத்தா, தேவா, பூதா) என இவை ஏவற்கண்
உகரம்பெறாவாயின.

     ‘நனி’ என்றதனால், 2மணலைவாரு, சருகைவாரு என ரகரம் ஏவற்கண் 3உகரம்
அரிதிற்பெறுமென்க.

     இன்னும் இதனானே இவ்விருமொழிக்கும் வருவனவெல்லாம் அறிந்து முடிக்க.

     (பி - ம்.) 1ஏவலுறா 2வாரு, சாரு, தேரு என 3உகரம்பெறும்

(4)

 

(207)

நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை.

     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) நகாரவீற்றுத் தொழிற்பெயர்க்கு உகரமேயன்றி வேற்றுமைக்கண்
அகரமும் மிகப்பெறும் எ - று.

     வ - று. பொருநக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை என வரும்.

(5)

 

(208)

ணனவல் லினம்1வரட் டறவும் பிறவரின்
இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக்
கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே.

     எ - ன், ணகாரனகாரவீறு புணருமாறுணர்த்துதனுதலிற்று.

     (இ - ள்.) ணகாரனகாரங்கள் வேற்றுமைக்கண் வல்லினம் வந்தால் முறையே
டகாரமும் றகாரமுமாகும்; மெல்லினமும் இடையினமும்வந்தால் இயல்பாம்;
அல்வழிக்கண் மூவினமும்வந்தாலும் 2இயல்பேயாம் எ - று.

     வ - று. மட்குடம், பொற்குடம்; சாடி, தாழி, பானை என வேற்றுமைக்கண்
வல்லினம்வரத் திரிந்தன. மண்ஞாற்சி, பொன்ஞாற்சி; நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை என
வேற்றுமைக்கண் மெல்லினமும் இடையினமும் வர இயல்பாயின. (மண், பொன்) +
(கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது) என
அல்வழிக்கண் மூவின மும்வர இயல்பாயின. பிறவுமன்ன.

     (பி - ம்.) 1வர டறவும் 2இயல்பாம்

(6)


     * உரிஞுக்கடிது......................உரிஞுவலிமையென இயைக்க.
     * உண்கொற்றா......................கொள்பூதாவென இயைக்க.