| (24) | உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் 1மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு. |
(இவற்றின்பொருள்.) இவ்வாறு நூற்கப்படுதலானும், நூலேபோலச் செப்பஞ்செய்தலானும் நூலெனப்படும் எ - று. நூலென்ற சொற்குக் காரணங்கூறினவெனக் கொள்க.(பி - ம்.) 1மாக்கள் |
| (23-4) |
| 2. ஆசிரியரியல்பு |
| நல்லாசிரியர் |
| | (25) | குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மினையவும் |
| 5 | அமைபவ னூலுரை யாசிரி யன்னே. |
| (26) | தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும் பருவ முயற்சி யளவிற் பயத்தலும் மருவிய நன்னில மாண்பா கும்மே. |
| (27) | அளக்க லாகா வளவும் பொருளும் துளக்க லாகா நிலையுந் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே. |
| (28) | ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும் மெய்ந்நடு நிலையு மிகுநிறைக் கோற்கே. |
| (29) | மங்கல மாகி யின்றி யமையா தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே. |
(இ - ள்.) இவ்வியல்பினையுடையார் 1கற்கப்படும் ஆசிரியர் எ -று. (பி - ம்.) 1கற்பிக்கப்படுமாசிரியர் |
| (25-9) |
| ஆசிரியரல்லாதவர் |
| (30) | மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும் அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும் கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங் 1கொப்பென முரண்கொள் சிந்தையும் |