| 94 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | வ - று, வட்டவடி; ஆடி, இலை எ - ம், வட்டக்கல்; சுனை, தாழி, பாறை எ-ம், வட்டஞான்றது; நீண்டது, மாண்டது எ - ம், வட்டவாரி எ - ம் இவை ஈறழிந்து விதியுயிரீறாய் உயிர்வரும்வழி உடம்படுமெய் பெற்றும் வன்மைவரும் வழிமிக்கும் ஏனைய வரும்வழி இயல்பாயும் அல்வழிக்கண்வந்தவாறு. மரங்குறிது; சிறிது, தீது எ-ம், கொல்லுங் கொற்றன், உண்ணுஞ்சாத்தன், துள்ளுந்3துடியன் எ - ம் அல்வழிக்கண் வன்மைவர இனமாய்த்திரிந்தது. மரவடி, மரவாட்டம், மரவிலை எ - ம், மரக்கோடு; 4செதிள், தோல், பூ எ - ம், மரஞாண், மரநூல், எ - ம், மரயாழ், மரவட்டு எ - ம் இவை 5மகரங்கெட்டு விதிஅகரவீறாய் வேற்றுமைக்கண் உடம்படுமெய் பெற்றும் 6மிக்கும் இயல்புமாயின. தங்கை, எங்கை, உங்கை; செவி, தலை, எ - ம், மரவங்கோடு, இலவங்கோடு, புளியங்கோடு, கோங்கங்கோடு; ‘செதிள், தோல் எ - ம் வேற்றுமைக்கண் வல்லினம்வர இனமாய்த்திரிந்தது.
‘திரிபவும்’ என்ற உம்மையாற் பகரம்வரும்வழித் திரியாதெனக் கொள்க.
(பி - ம்.) 1கினமாய்த்திரிபவும் 2வந்தால் இயல்பாயும் 3தொடியன் 4செதுள் 5மகரங்கெடுத்து 6வன்மைவரமிக்கு ஏனையவர இயல்பாயின. | (16) | | | (219) | வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும் அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள. | எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல் நுதலிற்று.
(இ - ள்.) வேற்றுமைக்கண் ஈறுகெட்டு வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் உறழ்வனவும், அல்வழிக்கண் உயிரும் இடையினமும்வரக் கெடாதே 1நிற்பனவுமாம் மகரவீற்றுமொழிகள் சில உளவாம் எ - று.
வ - று. குளக்கரை குளங்கரை என வேற்றுமைக்கண் உறழ்ந்தது. மரமழகிது, வடமற்றது, வடமேறிற்று எ - ம். மரம்வலிது, மரம் யாது, வெல்லும்வில்லி, ஓடும்யானை, அருளும்யோகி எனவும் அல்வழியில் இயல்பாயிற்று.
(பி - ம்.) 1நிற்கும் மகர | (17) | | | (220) | நுந்தம், எம்நம் மீறா மவ்வரு ஞநவே. | இதுவுமது.
(இ - ள்.) இந்நான்கு மொழிகளின் ஈற்றுமகரம் மேல்வரும் ஞ நக்களாகத் திரியும் எ - று.
வ - று. (நும், தம், எம், நம்) + (ஞாண், நூல்) எனவரும் | (18) | | | (221) | அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும். | எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) அகமென்னுஞ் சொல்முன்னர்ச் செவி கை என்பனவரின் நிலைமொழியின் இடையில்நின்ற உயிரும் மெய்யும் கெடும் எ - று. | |
|
|