4. - மெய்யீற்றுப்புணரியல்

99

   
 

(230)

வல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும்
பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம்.
     இதுவுமது.

     (இ - ள்.) வல்லென்னும்பெயர் தொழிற்பெயரேபோல இருவழியும் உகரம்பெறும்.
பலகையும் நாயும் வருமொழியாயின் வேற்றுமைக்கண் உகரமேயன்றி அகரமும்பெறும்
எ - று.

     வ - று. வல்லுக்கடிது; ஞான்றது, வலிது எ - ம், வல்லுக்கடுமை; ஞாற்சி, 1வலிமை
எ - ம், இருவழியும் மூவினமும்வர உகரம் பெற்றது. வல்லப்பலகை, வல்லநாய் என
வேற்றுமைக்கண் அகரம் பெற்றது.

     ‘வரினும்’ என்ற உம்மையான், வல்லக்கடுமை 2யெனவுங் கொள்க. ‘அவ்வும்’
என்ற உம்மையான், உகரப்பேறே வலியுடைத்தென்க.

     (பி - ம்.) 1நீட்சி, மாட்சி, வலுமை 2யெனவும், வன்றோல், வன்மரமென
உரிச்சொல் ஈறுதிரிவனவும் கொள்க.

(28)

 

(231)

நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்வழி யானும் றகர மாகும்.
     இதுவுமது.

     (இ - ள்.) இந்நான்குசொல்லும் அல்வழிக்கண்ணும் றகரமாகும்
எ - று.

     வ - று. நெற்கடிது, செற்கடிது, கொற்கடிது, சொற்கடிது; சிறிது, தீது, பெரிது
எனவரும்

(29)

 

(232)

இல்லெ னின்மைச் சொற்கை யடைய
வன்மை விகற்பமு மாகா ரத்தொடு
வன்மை யாகலு மியல்பு மாகும்.

     எ - ன், எய்தாததெய்துவித்தல் நுதலிற்று.

     (இ - ள்.) 1இல்லென்னும் இன்மைச்சொல்லிற்கு ஐகாரம் இறுதிவர வல்லொற்று
ஒருகால்மிக்கும் ஒருகால்மிகாதும் வருதலும், ஆகாரம் இறுதிவர வல்லொற்றுமிகுதலும்
இயல்பேயாதலுமென்னும் 2இம்மூன்று மாம் எ - று.

     வ - று. இல்லைப்பொருள், இல்லைபொருள்; இல்லாப்பொருள்; இல்பொருள்
எனவரும்.

     (பி - ம்.) 1இல்லென்னுஞ்சொல்லினான் ஒருபொருளின்மையென்னுஞ் சொற்கு
அவ்விறுதி ஐகாரம்வர 2இந்நான்குமாம்

(30)

 

(233)

புள்ளும் வள்ளுந் தொழிற்1பெயரு மானும்.

     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இவ்விருசொற்களும் இருவழியும் மூவினமும்வரத் தொழிற்
சொல்லேபோல் உகரம்பெறும் எ - று.