பக்கம் எண் : 106
  

பதிப்புரை
 

குறிக்குள் தரப்பட்டுள்ளன. எந்த நூல் அல்லது உரை என்பது ஆங்காங்கே
அடிக்குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

     உ-ம்: 1. நூ. 267.

     < மேற்றொட்டு மரீஇ வழங்கியது, “ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச்
சிறுகாலை”
(தொல். எச்ச. 47 நச்.), யானையிலண்டம், யாட்டுப்பிழுக்கை என வரும்.
தம் பொருள்மேல் நில்லாது அணி குறித்து நின்ற, “பகல்கான் றெழுதரும்
பல்கதிர்ப் பருதி”
(பெரும்பாண். 2*) என்றாற் போல்வன தம் பொருளை
உணர்த்துங்கால் மறைத்துக் கூறப்படுமாறும் உணர்க.
 > 

     நச்சினார்க்கினியர் (தொல். எச்ச. 47) உரை.

     உ-ம்: 2. நூ. 299.

     இந்நீக்கப்பொருள்,  <“நிலைத்திணை யியங்கு திணைபண் பாதியின்”
(இல. கொ. 38;1) வரும் எனவும் கொள்க. அவையாவன மலையின் இழிந்தான்
எனவும் யானையின் இழிந்தான் எனவும், “சிறுமையி னீங்கிய”
(குறள். 98*)
எனவும் வரும். “ஆதி” (இல. கொ. 38:1) என்றதனால், “குடிப்பிறந்து குற்றத்தி
னீங்கி”
(குறள். 502), “ஐயத்தி னீங்கி” (குறள். 353) என வரும் > எனவும் கொள்க.
இவ்விலக்கணத்தான் முன்னர்க் காட்டிய உதாரணங்களையும் உய்த்துணர்ந்து
கொள்க.


     இலக்கணக் கொத்து நூற்பாவும் (நூ. 38) உரையும்.

     குறிப்பு ஐந்து:

     *

     நன்னூல் மூலம், உரை மேற்கோள் ஆகியவற்றில் நிகழ்ந்துள்ள பாடபேதங்கள்
கீழே உள்ளவாறு உடுக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

     நன்னூல் மூலம்:

     உ-ம்: 1. நூ. 53. “தகும்புல வோற்கே*”
“தகும்புல வோர்க்கே” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம்.


     உ-ம்: 2. நூ. 265. “றொருமைப்* பன்மை”
“றொருமை பன்மைப்” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம்.