பக்கம் எண் : 107
  

பதிப்புரை
 

     உரை மேற்கோள்:

     உ-ம்: நூ. 91 (யா. வி. 2*); நூ. 101 (முத்.*);
     நூ. 202 (அகம். 384:5*); நூ. 222 (தொல். குற்றிய. 77* இளம்.).
 

குறிப்பு ஆறு:
 

     ஒரு நூற்பாவின் உரையில் அதே நூற்பாவில் வந்துள்ள சொற்களையும்
தொடர்களையும் மீண்டும் விதந்து கூறி, அவற்றுக்கு இலக்கணக் குறிப்பும் நயவுரையும்
கூறுவது உரைமரபு. அத்தகைய சொற்களும் தொடர்களும் ஒற்றை மேற்கோள்
குறிகளுக்குள் இயன்ற வரையில் மூலத்தில் உள்ளவாறே தரப்பட்டுள்ளன.

     உ-ம்: 1. நூ. 301.

     இடப்பொருளே அன்றி, ஏனை ஐந்து பொருளும் ஈண்டு இடனாய் நிற்றலின்,
‘பொருண்முத லாறும்’ என்றும் வினை வரினும் அவ்வினைமுதல் இவ்விரு
கிழமையின்பாற் படும் ஆதலின், ‘கிழமையின் இடன்’ என்றும் கூறினார்.

     ஈண்டு, ‘இது’ என்றதூஉம் தொகுதியொருமை.

     உ-ம்: 2. நூ. 399.

     ‘பொருள்’ என வேறு விதந்தமையின், ‘உலகு’ என்றது ஒழிந்த காலம்
அனைத்தினையும் இடம் அனைத்தினையும் என்பதூஉம், ‘இனைத்தென் றறிபொருள்’
என்றமையானும், ‘உலகு’ எனக் காலம் அனைத்தினையும் இடம் அனைத்தினையும்
கூறுதலானும், ‘உம்மை’ என்றது முற்றும்மையை என்பதூஉம் பெற்றாம்.
 

குறிப்பு ஏழு:


     இதுபோலவே ஒரு நூற்பாவின் உரையில் அதற்கு முன்னும் பின்னும் உள்ள
நன்னூல் நூற்பாக்களை அல்லது நூற்பாக்களின் தொடர்களை இயைபு கருதி
எடுத்துக்காட்டுவதும் உரைமரபு. இவை அனைத்தும் வழக்கமான மேற்கோள்
குறிகளுக்குள் நூற்பா எண்களோடு மூலத்தில் உள்ளவாறே தரப்பட்டுள்ளன.

     உ-ம்: 1. நூ. 214.

     “குறிலணை வில்லா ணனக்கள் வந்த
     நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே” (நூ. 210)