பக்கம் எண் : 141
  

நன்னூல் விருத்தியுரை
 

     இ-ள்: தோன்றாத நுட்பங்களை எல்லாம் தோற்றிப், பல துறைப்பட்டு விரிந்த நூலைச் செய்து முடித்தான் ஆயினும் தன்னைத் தான் புகழ்தல் தகுதி அன்றாம். ஆதலின் நூல் செய்தானது புகழாகிய சிறப்புப் பாயிரத்தைப் பிறர் கூற வேண்டும் எ-று.
(52)


தற்புகழ்ச்சி குற்றம் ஆகாத இடங்கள்
 

53.

மன்னுடை மன்றத் தோலைத் துக்கினுந்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினுந்
தன்னை மறுதலை பழித்த காலையுந்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல* வோற்கே.
 
     எ-னின்45 தற்புகழ்ச்சியும் ஒரோவழிக் குற்றம் அன்று என்பது உணர்த்துதல்
நுதலிற்று.

     இ-ள்: இவ்விடங்கள் ஆயின் தன்னைப் புகழ்தலும் தகுதியாம் புலவோற்கு எ-று.

     ‘புகழ்தலும்’ என்ற உம்மையான் இவ்விடங்களினும் தனனைப் புகழாமையே தகுதி
என்பது பெற்றாம். (53)
 

பாயிரத்தின் இன்றியமையாமை
 

54.

ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே.
 
     எ-னின், இருவகைப் பாயிரங்களும் (2) நூற்கு இன்றியமையாதன என்பது உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: ஆயிரம் உறுப்புகளான் விரிந்த நூல் ஆயினும் பாயிரம் இல்லாதது நூல் அன்று எ-று. (54)
 

பாயிரம் இல்லாமல் நூல் நிரம்பாமை
 

55.

மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற வணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது.
    
------------------------
     45“தகும்புல வோர்க்கே” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம்.