| நன்னூல் விருத்தியுரை | எ-னின், மேல், “பாயிர மில்லது பனுவ லன்று” (நூ.54) என்றார்; அஃது அன்று ஆதற்குக் காரணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அறிவுடையோர் மாடம் முதலிய மூன்றற்கும் சித்திரம் முதலிய மூன்றும் போலக் கருதி, அழகிதாகிய பொருளை உணர்த்தாநின்ற இருவகைப் பாயிரங்களையும் உரைத்து, எவ்வகைப்பட்ட பெரிய நூல்கட்கும் முன்னர்ப் பெய்துவைத்தார பெரும்பாலும். ஆதலின், “பாயிர மில்லது பனுவல்” (நூ. 54) அன்றாம் எ-று. (55) | | பொதுப் பாயிரம் முற்றிற்று | |
|
|