“தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று” (குறள். 236) என அலகு பெறாதும் ஒருபுடை ஒத்து, அவற்றின் இடையே சார்ந்து வருதலானும் ஏனைய தத்தம் முதலெழுத்தின் திரிபு விகாரத்தால் பிறத்தலானும் சார்பெழுத்து ஆயின எனக் கொள்க. அவ்வாறன்றி, உயிர்மெய் ஒழிந்தன அகரம் முதலியனபோல் தனித்தானும் ககரம் முதலியனபோல அகரமொடு சிவணியானும் இயங்கும் இயல்பின்றி, ஒரு மொழியைச சார்ந்து வருதலே தமக்கு இலக்கணமாக உடைமையின் சார்பெழுத்து ஆயின53 எனக் கோடலும் ஆம் என்க. இனி ஆசிரியர் தொல்காப்பியர் செய்கை ஒன்றனையும் நோக்கிச் சார்பெழுத்து மூன்று எனக் கருவி செய்தார் ஆகலின் இவ்வாசிரியர் செய்கையும் செய்யுளியலும் நோக்கிச் சார்பெழுத்துப் பத்து எனக் கருவி செய்தார்54 என்பதும் உய்த்துணர்க. (5) |