| எனக் குறில் நெடிலாய் அளபெழுந்து, அலகு பெற்றும் பெறாதும் இன்னிசை நிறைப்ப வருவனவும், “உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் வரனசைஇ யின்னு முளேன்” (குறள். 1263) என அளபெழுந்து, அலகு பெற்றும் பெறாதும் சொல்லிசை நிறைப்ப வருவனவும், “வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅ ரெனின்” (குறள். 1194) என்பதனுள், “கெழீஇயிலர்” (குறள். 1194) என அளபெழுந்து, அலகு பெறாது சொல்லிசை நிறைப்ப வருவனவும் கொள்க. எழுத்துப் பல ஆயின ஒலிவேற்றுமையான் அன்றே? அங்ஙனம் ஆதலின் நெடிலது விகாரமாய் ஓர் ஒலியாய்ப் பிறப்பதே அளபெடை என்பார், ‘நெடில் அளபெழும்’ என்றும், ‘அவற்றவற் றினக்குறில் குறியே’ என்றும்82 கூறினார். ஆசிரியர் தொல்காப்பியரும் நீரும் நீரும் சேர்ந்தாற்போல நெட்டெழுத்தோடு குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டு இசைப்பதே அளபெடை என்பார், |