பக்கம் எண் : 523
  

நன்னூல் விருத்தியுரை

சொல்லதிகார நூற்பாக்களின் தொகையும் பொருளடைவும்
 

  பேரறு பத்திரண்டு பின்வினையெண் ணான்குபொது450
ஓரறுபத் தெட்டிடை மூவேழின் - மேலொன்
றுரியிருபத் தொன்றாகச் சொற்சூத் திரத்தின்
விரியிருநூற் றோரைந்தா வேண்டு.

இருதிணை மூவிட நான்மொழி யைம்பா லறுதொகையேழ்
அருவழு வெட்டுரு பொன்பான் றொகாநிலை யாய்ந்தவெச்சம்
ஒருபது கோளெட்டு முப்பொழு தீரிட மோரியல்பாய்
வருமொழி மூன்று முணரச்சொல் வண்மை வருந்திருவே.
   
-------------------------------
     450சொல்லதிகாரத்தின் இயல் வைப்புமுறையைப், ‘பேர், வினை, பொது, இடை, உரி’ என்று இவ்வெண்பா சுட்டுவது நோக்கத் தக்கது.