105

பாங்கி நின் குறை நீயே சென்றுரை யென்றற்குச் செய்யுள்:

1"மருப்பா வியதொங்கல் வாணன்றென் மாறை வனசமலர்த்
திருப்பாவை யன்னவென் சேயிழை யாட்குன் றிருவுளத்து
விருப்பா கியகுறை யுள்ளதெல் லாஞ்சொல்லி வேண்டுகநீ
பொருப்பா மொழியப் பெறாரெம்ம னோரிவை போல்வனவே"

எனவும்,

2"தன்னையுந் தானாணுஞ் சாயலாட் கிஃதுரைப்பின்
என்னையு நாணப் படுங்கண்டாய்-மன்னிய
வேயேய்மென் றோளிக்கு வேறா வினியொருநா
ணீயே யுரைத்து நிறு"

எனவும் வரும்.

பாங்கியைத் தலைவன் பழித்தற்குச் செய்யுள்:

3"வில்லார் நுதல்வெய்ய வேலார் விழிக்கென் மெலிவுசொல்ல
வல்லா ரிலைசொல்ல வல்லையென் றியான்றஞ்சை வாணன்றெவ்வின்
ஒல்லா திதுநுமக் கென்றுண ரேனின் றுணங்கியிந்நாள்
எல்லா மிரந்தது நின்குறை யேயல்ல வென்குறையே"

எனவும்,

4"மாதர் குறைமுடிக்க வல்லாயை வல்லையெனக்
காதல் சிறப்பக் கருதியது - மேதகைய
பாம்படுதே ரல்குல் பயம்படுநீர் மானமான்
5தேம்படுவெண் டேர்மேற் செலல்"

எனவும் வரும்.

பாங்கி பேதைமை யூட்டற்குச் செய்யுள்:

6"தேனுஞ் சுரும்புஞ் செறிதொங்கல் வாணன்றென் மாறைவெற்பா
மானுங் கலையும் வடிக்கணை யாலெய்து மன்னுயிரும்
ஊனுங் கவர்கின்ற தன்னையர் போலயி லொத்தகண்ணாள்
தானும் பிறருள்ள நோயறி யாத தகைமையளே"

எனவும்,


1. த. கோ. செ: 88.

2. தொல், பொருள், களவியல், 23ஆம் சூ. உரை மேற்கோள்.

3. த. கோ. செ: 89.

4. இலக்கண விளக்கம், பொருள், அகத்திணையியல், 137ஆம் சூ. உரை மேற்கோள்.

5. (பாடம்) 'தேம்படு தேர்மீது.'

6. த. கோ. செ: 90.