1"மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே" எனவும் வரும். அம் மடலேற்றினைத் தலைமகன் தன்மேல் வைத்துச் சாற்றற்குச் செய்யுள்: | 2"வன்பணி போனிலந் தாங்கிய வாணன்றென் | | மாறைவெற்பின் | | மின்பணி பூண்முலை மெல்லிய லீர்குறை | | வேண்டியுங்கண் | | முன்பணி வேனின்று நாளைவெண் பூளை | | முகிழெருக்கோ | | டென்பணி வேன்மடன் மேல்வரு வேனிவை | | யென்பணியே" | எனவும், 3"தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு மாலை யுழக்குந் துயர்" எனவும் வரும். பாங்கி, தலைமகள் அவயவத்தருமை சாற்றற்குச் செய்யுள்: | 4"தொடையே யெருக்கென்பு நீயணிந் தாலென்னை | | சூல்வளையூர் | | மடையேய் வயற்றஞ்சை வாணன்வெற் பாமல | | ரோன்வகுத்த | | படையே நயனம் படைத்தபொற் பாவை | | படியெடுக்க | | விடையே தெனத்தெரியா துரை யாணி | | யிடவரிதே" | எனவும், "கம்ப மதயானைக் கண்டன் கடற்றொண்டிக் கொம்பர் விழிக்குவமை கூறுவதே-னம்பு கருநீலஞ் செங்குவளை காலன்வே லாலம் பெருநீர்மை தோற்றழிந்த பின்" எனவும் வரும்.
1. குறுந். செ: 17. 2. த. கோ. செ: 103. 3. திருக்குறள், 1135. 4. த. கோ. செ: 104.
|