145

எய்திப் பாங்கி கையுறை காட்டலும்
இற்கொண் டேகலும் பிற்சென் றிறைவனை
வரவு விலக்கலும் பெருமகன் மயங்கலும்
தோழி தலைமகள் துயர்கிளந்து விடுத்தலும்
திருமகட் புணர்ந்தவன் சேறலும் என்றாங்கு
இருபத் தேழும் இரவுக்குறி விரியே.

(இ - ம்.) இரவுக்குறியின் விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இறையோன் இருட்குறி வேண்டல் முதலாகத் திருமகட் புணர்ந்தவன் சேறல் ஈறாகச் சொல்லப்பட்ட இருபத்தேழும் இரவுக்குறியின் விரி என்றவாறு.

இறையோன் இருட்குறி வேண்டற்குச் செய்யுள்:

1"கருவிருந் தெண்டிசை யுங்கன மாமழை கான்றதுள்ளம்
வெருவிருந் தெம்பதிக் கேகவொண்ணாது விதம்விதமாய்
வருவிருந் தென்றும் புரந்தருள் வாணன்றென் மாறையன்னீர்
ஒருவிருந் தெங்களைப் போலெய்து மோகங்கு லுங்களுக்கே"

என வரும்.

பாங்கி நெறியின தருமை கூறற்குச் செய்யுள்:

2"மலைமாது வல்லவன் வாணன் வரோதயன் மாறைவெற்பிற்
சிலைமா லுருமெங்குந் தீயுமி ழாநிற்குஞ் சிங்கமெங்கும்
கொலைமா கரியிரை தேர்ந்துழ லாநிற்குங் கொற்றவபொற்
கலைமா னுறைபதி நீவரு மாறென்கொல் கங்குலிலே."

எனவும்,

3"ஒருவரைபோ லெங்கும் பலவரையுஞ் சூழ்ந்த
அருவரை யுள்ளதாஞ் சீறூர்-வருவரையுள்
ஐவாய நாகம் புறமெல்லா மாயுங்காற்
கைவாய நாகஞ்சேர் காடு."

எனவும் வரும்.


1. த. கோ. செ: 163.

2. த. கோ. செ: 164.

3. திணைமாலை நூற். செ: 13.