171

1"வளைவாய்ச் சிறுகிளி விளைதினை கடீஇயர்
செல்கென் றோளே யன்னை யெனநீ
சொல்லி னெவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சார னாட வாரலோ வெனவே."

எனவும் வரும்.

வெறிவிலக்குவித்தற்குச் செய்யுள்:

2"மின்னா திடித்தென்ன வன்னைகொண் டாள்வெறி விந்தை மங்கை
மன்னாண்மை மன்னிய வாணன்றென் மாறை வரையில் வண்டியா
ழென்னா வசுண மிறைகொள்ளு நாட னெனக்கருளான்
முன்னா ளருளிய நோய்தணிப் பானின்று மொய்குழலே."

எனவும்,

3"வெறிகமழ் வெற்பனென் மெய்ந்நீர்மை கொண்ட
தறியாண்மற் றன்னோ வணங்கணங்கிற் றென்று
மறியீர்த் துதிரந்தூய் வேலன் தரீஇ
வெறியோ டலம்வரும் யாய்."

எனவும் வரும்.

பிற விலக்குவித்தற்குச் செய்யுள்:

4"பொருபான் மதியினைப் போன்மருப் பியானையிற்

பொன்னொடின்பந்

தருபான் மொழிவஞ்சி சாரவந் தார்தஞ்சை

வாணன்வெற்பின்

ஒருபா னொதுமல ரென்னவெந் தீயுலை

யுற்றசெவ்வேல்

இருபான் மருங்கினுங் கொண்டெறிந் தாலொத்த

தென்செவிக்கே.

எனவும்,

5"காணினி வாழி தோழி யாணர்க்
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட



1. குறு. செ : 141.

2. த. கோ. செ : 225.

3. ஐந்திணை ஐம்பது, செ : 20.

4. த. கோ. செ : 226.

5. குறு. செ : 171.