222

றெடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்றவுவ ளாயத் தோரே."

எனவும் வரும்.

செவிலி தன்னறிவின்மைதன்னை நொந்துரைத்தற்குச் செய்யுள்:

1"வழியா வரும்பெரு நீர்த்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போற்
கழியாத வன்புடைக் காளைபின் னாளைக் கலந்துகொண்டல்
பொழியாத வெஞ்சுரம் போகுவல் யானென்று போங்குறிப்பால்
ஒழியாதென் முன்புசொன் னாள்பேதை யேனொன்றை யோர்ந்திலனே."

எனவும்,

2"முலைக்கண்ணு முத்துமுழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாது மறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉ நெறிசெலிய போலுமென்
பூம்பாவை செய்த குறி."

எனவும் வரும்.

செவிலி தெய்வம் வாழ்த்தற்குச் செய்யுள்:

3"இணங்கிப் புவனத் தெவருமில் லாவென்

னிளங்கொடியாள்

உணங்கிக் கழித லொழியவென் பால்வர

வுன்னையன்பால்

வணங்கிப் பலமுறை வாழ்த்துகின் றேன்றஞ்சை

வாணன்றெவ்வை

யணங்கித் திரள்புயத் தான்மல யாசலத்

தாரணங்கே."

எனவும்,

4"ஞாயிறு 5காயாது மரநிழற் பட்டு
மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த்
தண்மழை தலையின் றாக 6நந்நீத்துச்
7சுடர்வாய் நெடுவேற் காளையொடு
8மடவர லரிவை போகிய சுரனே."

எனவும் வரும்.

(14)


1. த. கோ. செ : 326.

2. நாலடியார், செ :339.

3. த. கோ. செ : 327.

4. குறு. செ : 378.

(பாடம்) 5. 'காணாத மானிழற்படீஇ.'

6. 'தண்ணளி.'

7. 'சுடர்படு.'

8. 'மடமாவரிவை.'