295

(இ - ம்.) அதிகாரத்திற்கு ஆவதொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தீதில் பொருள் வேறே தோன்றினவாயினும் அவற்றை இதனுள் எடுத்தோதப்பட்ட பொருள்களோடு கூட்டி உண்மை புலப்படச் சொல்லிப் பிறர்க்கு உணர்த்துதல் குணமுடையோர்க்கு இலக்கணம் என்றவாறு.

(43)

ஐந்தாவது ஒழிபியல் முற்றிற்று.

"அகத்திணை நூற்றுப் பதினே ழடங்கா
மிகுத்தகள வைம்பதுடன் மேனான்--கிகுத்த
வரைவிருபத் தொன்பஃது மன்னுங்கற் பீரைந்
துரையொழிபு நாற்பஃதோ டொன்று"

"போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கஞ்சேர் ஊடல் அணிமருதம் - நோக்குங்கால்
இல்லிருத்தல் முல்லை இரங்கல் நறுநெய்தல்
சொல்விரிந்த நூலின் தொகை."