61

1"புயலே சுமந்து பிறையே யணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின்
அயலே பசும்பொற் கொடிநின்ற தால்வெள்ளை யன்னஞ்செந்நெல்
வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே"

எனவும்,

2"கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா
அரும்பிவர் மென்முலை தொத்தாப்-பெரும்பணைத்தோள்
பெண்டகைப் பொலிந்த பூங்கொடி
கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே".

எனவும் வரும்.

(3)

ஐயம்

120. மடமா னோக்கி வடிவுங் கண்ட
இடமுஞ் சிறந்துழி யெய்துவ தையம்.

(இ - ம்.) ஐயம் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைமகள் வடிவும் அவளைத் தான்கண்ட இடமுஞ் சிறப்புடைய ஆய காலத்துத் தலைமகன்பால் ஐயம் நிகழும் என்றவாறு.

எனவே, அவை சிறப்புடைய அல்லாத காலத் தையம் நிகழாதென்பதாம்.

என்னை?

3"சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப
இழிந்துழி யிழிபே சுட்டலான"

என்றாராகலின்; அதற்குச் செய்யுள்:-

4"பாரணங் கோதிருப் பாற்கட லீன்றபங் கேருகத்தின்
ஓரணங் கோவெற் புறையணங் கோவுயர் பாவலர்க்கு


1. தஞ்சை கோ. செ: 1.

2. பு. வெ. கைக்கிளைப் படலம் செ: 1

3. தொல், பொருள், களவியல்: சூ.8. இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கொண்ட பொருள் வேறு. அவர்கள் உரையை நோக்குக.

4. த. கோ. செ: 2.